Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

கார்களை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி! உங்க கிட்ட இந்த கார் இருக்கா?

 

கோளாறுகளை சரிசெய்து தருவதற்காக சுமார் 1.8 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மோட்டார் பகுதியில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்துதருவதாகக் கூறி சுமார் 1.8 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுகிறது. மோட்டார்களில் பிரச்சினை ஏற்படுவதாக வாடிக்கையாளர் தரப்பில் அளித்த புகார்களை அடுத்து இந்த முடிவை மாருதி சுஸுகி மேற்கொண்டுள்ளது.

மாருதி சுஸுகியின் அனைத்து கார்களிலும் இந்தப் பிரச்சினை இல்லை. சியாஸ், எர்டிகா, விடரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ், எக்ஸ்.எல்.6 ஆகிய மாடல்களில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் பெட்ரோல் வேரியண்ட் கார்களில்தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. திரும்பப் பெறப்படும் இந்தக் கார்கள் நவம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கி சரிசெய்யப்படும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்களைத் திரும்பப் பெறும் வரை இந்தக் கார்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நீர்நிலைப் பகுதிகளில் வண்டியை ஓட்டவேண்டாம் எனவும் காரின் உள்புற பாகங்களில் தண்ணீரை ஸ்பிரே செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 2018 மே 4ஆம் தேதி முதல் 2020 அக்டோபர் 27ஆம் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டு சரிசெய்து தரப்பில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது விற்பனை செய்யப்பட்ட கார்களில்தான் இந்தப் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!