Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now
Click here to join our WhatsApp channel
செவ்வாய், 1 மார்ச், 2022
வடித்த சாதம் குழைந்துவிட்டதா..? கவலையை விடுங்க.. அதை வைத்து 5 வகையான டிஷ் செய்யலாம்..!
ஊர்க்கோடாங்கி
செவ்வாய், மார்ச் 01, 2022
வீட்டில் வடித்த சாதம் குழைந்துவிட்டால் கவலையே வேண்டாம். அதை வைத்து இப்படி அருமையான உணவுகளை சமைக்கலாம்.
தயிர் சாதம் : 1 கப் பால் , தயிர் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய்
வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு , கறிவேப்பிலை, பச்சை
மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் , கொத்தமல்லி சேர்த்து தாளித்து தயிரில்
கொட்டி கலந்து சாதத்தில் ஊற்றி கிளறுங்கள்.
ரைஸ் புட்டிங் : குழைந்த சாதத்தில் 2 கப் பால் ஊற்றி தேவையான அளவு
சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தட்டிப் போட்டு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு
சுட சுட கொதிக்க வைத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும். தேவைப்பட்டால்
இதில் திராட்சை, முந்திரி சேர்க்கலாம்.
பகோடா : 3 கப் சாதத்தை கைகளில் பிசைந்துகொண்டு அதோடு கடலை மாவு 2 ஸ்பூன்.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி , உப்பு மற்றும் 3 ஸ்பூன் எண்ணெய்
சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் காய்ந்ததும்
பகோடா போல் போட்டு எடுங்கள். அவ்வளவுதான் மொறு மொறு பகோடா ரெடி.
தோசை : 3 பவுல் சாதத்தை குழைய கரைத்து 1 கப் தயிர் , உப்பு 3 ஸ்பூன்
எண்ணெய், 2 வெங்காயம் நறுக்கியது என கலந்துகொள்ளுங்கள். நன்குக் கலந்ததும்
தோசைக் கல் வைத்து தோசை போல் ஊற்றி சுட்டு எடுக்கலாம்.
ஊத்தாப்பம் : 2 கப் சாதத்தை நன்கு குழைத்துக்கொள்ளுங்கள். அதோடு 1 கப்
தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து
கெட்டியான மாவு போல் கலந்துகொள்ளுங்கள். தோசைக் கல் வைத்து எண்ணெய் ஊற்றி,
ஊத்தப்பம் போல் மாவை ஊற்றி பிரட்டி எடுத்து சுடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக