Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

புத்தியை தீட்டிக்கொள்ள ஒரு சின்ன புதிர்... கொஞ்சம் ட்ரை பண்ணுங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


-------------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------------------

ஆசிரியர் : ஒரு மனிதன் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
மாணவன் : அந்த மனிதன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடணும் சார்!
ஆசிரியர் : 😐😐

-------------------------------------------------------------------
டங்கு சிலிப் ஆகுதா?
-------------------------------------------------------------------

😛 சொல்ல சொல்ல சொல்லிக் கொள்ள எதுவும் இல்ல. சொல்லச் சொல்ல சொந்தங்களும் எதுவும் இல்ல.

😛 பக்தியில் முத்தின பக்தன் பக்தர்களை பத்துப் பத்துப் பேராக பந்திக்கு அழைத்தான்.

-------------------------------------------------------------------
மூளைக்கு வேலை..!!
-------------------------------------------------------------------
🍋 கண்ணனுக்கு தோட்டத்து மாங்காய் பறித்துச் சாப்பிட ஆசை. அதுவும் திருட்டு மாங்காய். மாந்தோப்புக்குச் சென்றவன், அடுத்தடுத்து மூன்று காவலாளிகள் இருப்பதைக் கண்டான்.

🍋அவர்களை மீறி மாங்காய் பறிக்க முடியாது. திடீரென கண்ணனின் மூளைக்குள் பளிச் என்று பல்ப் எறிந்தது.

🍋முதல் காவலாளியிடம் சென்றவன், என்னைத் தோப்புக்குள் அனுமதித்தால், நான் பறிக்கும் மாங்காய்களில் சரிபாதியை உங்களுக்குத் தருவேன். அதில் இருந்து ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் எனக்குத் திருப்பித் தந்தால் போதும்! என்றான். காவலாளி அதற்குச் சம்மதித்து அவனை உள்ளே அனுமதித்தான். இதுபோலவே மற்ற இரண்டு காவலாளிகளிடமும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.

🍋வேண்டிய மாங்காய்களைப் பறித்துக்கொண்டு திரும்பி வரும்போது மூன்று காவலாளிகளிடமும் ஏற்கனவே சொன்னவாறு கொடுக்கல், வாங்கல் முடித்து வெளியே வந்தான். ஆனாலும், பறித்த மாங்காய்களில் ஒன்று கூடக் குறையாமல் கண்ணன் கைகளில் இருந்தது. எப்படி?

விடை : கீழே 👇

-------------------------------------------------------------------
சமையல் டிப்ஸ்...!!
-------------------------------------------------------------------
🍲 கேரட் சூப் செய்யும்போது, சிறிது சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் கெட்டியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும்.

🍲 கேரட் சூப் செய்யும்போது கொத்தமல்லியை வறுத்து பொடி செய்து சேர்த்தால் கேரட் சூப் சுவையாக, நல்ல மணமாக இருக்கும்.

🍲 புளியை சிறிதளவு நீரில் கரைத்து அத்துடன் முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு கொதிக்க வைத்தால் முருங்கை பூ சூப் தயார்!

🍲 சூப் செய்வதற்கு பாலை சேர்க்கும்போது ஆடை நீக்கிய பாலை சேர்த்தால் சூப் சுவையாக இருக்கும்.

🍲 உருளைக்கிழங்கு சூப்பில் பல்வகை தானியங்களை சேர்த்துக் கொண்டால் சூப் ருசியாக இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

-------------------------------------------------------------------
விடை :
-------------------------------------------------------------------

கண்ணன் பறித்ததே இரண்டு மாங்காய்கள்தான். கூட்டிக் கழித்துப் பாருங்கள். கணக்கு சரியாக வரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக