Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 மார்ச், 2022

ரூ1000 கொடுத்து சாதம் வாங்கிய தம்பதி... என்ன நடந்தது? இங்கே காணுங்கள்


நீங்கள் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அங்கு உணவை ஆர்டர் செய்யும் முன்பு அதன் விலையை தெரிந்து கொள்வீர்கள். ஏன் என்றால் எல்லா இடங்களிலும் உணவின் விலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. விலையை பார்க்காமல் ஆர்டர் செய்துவிட்டோம் என்றால் கடைசியில் நம் பர்சை காலியாக்கிவிட்டு வரவேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும்.

இந்நிலையில் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற தம்பதியினர் உணவு விலையை பார்க்காமல் ஆர்டர் செய்து சிக்கலில் மாட்டிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அவர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு வெளியில் உணவை பார்சல் வாங்கிவிட்டு ரூமிற்கு வந்துவிட்டனர். ரூமிற்கு வந்த பிறகு தான் அவர்கள் சாதம் வாங்க மறந்துவிட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலிலேயே இருந்த உணவகத்திற்கு போன் செய்து உணவை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அதன் விலையை கவனிக்கவில்லை

ஆர்டர் செய்த உணவு வந்து பில்லை பார்த்ததும் தம்பதியினருக்கு பெரும் அதிர்ச்சி இரண்டு பவுல் சாதம் மட்டும் ஆர்டர் செய்தவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ1000 பில் வந்துள்ளது. இதை அவர் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விலையை பார்க்காமல் உணவு ஆர்டர் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்ட விணையை அவர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தது. தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக