Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

தலையணையோடு மொபைலை வைத்துக் கொண்டு தூங்குபவரா நீங்கள்.? நிச்சயம் இதைப் படிங்க!


தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவது என்பது மனநிலைக்கு மிகவும் நல்லது என்பது யாருக்கு தெரியுமோ தெரியாதோ கட்டிப்பிடித்து தூங்குபவர்க்கு நிச்சயம் தெரியும்; புரியும்.
அதே சமயம், தலையணையைப் போல உங்கள் மொபைல் போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!
புற்றுநோய்:
மொபைல் போனை அருலேயே வைத்துக் கொண்டு உறக்கம் கொள்ளும் பழக்கம் கொதிறுந்தால் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்பும் உண்டு.
ரேடியேஷன்:
மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதய பாதிப்புகள்:
மொபைல் போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்பக புற்றுநோய்:
குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல் போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
தீ:
மொபைல் போன்களால், உங்கள் தலையணை தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
ஓய்வில் பாதிப்பு:
இரவு என்பது ஓய்வு கொள்ளும் நேரம், உறக்கம் கொள்ளாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வில் குறையும் பாதிப்பும் ஏற்படும்.
அலாரக்கடிகாரம்:
அலாராத்திற்காக மட்டும் தான் மொபைல்போனை தலையணை அருகே வைக்கிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக நீங்கள் ஒரு அலாரக்கடிகாரம் வாங்கி விடுவதே நல்லது.