Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 செப்டம்பர், 2018

ஆறாவது அத்தியாயம் (ஆத்ம ஸம்யம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை


ஜிதாத்மந: ப்ரஷாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:।
ஷீதோஷ்ணஸுகது:கேஷு ததா மாநாபமாநயோ:॥ 6.7 ॥

தன்னை வென்றவனுக்கு , மனம் தெளிந்தவனுக்கு, குளிர் – சூடு, இன்பம் – துன்பம், மானம் – அவமானம் போன்ற இருமைகளில் இறைவுணர்வு நிலைத்திருக்கும். 

ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய:।
யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஷ்மகாம்சந:॥ 6.8 ॥

ஞான, விஞ்ஞான அனுபவங்களின் வாயிலாக திருப்தி அடைந்தவன், மனச்சஞ்சலம் இல்லாதவன், புலன்களை வென்றவன், மண், கல், பொன் இவற்றை சமமாக பார்ப்பான்.— இத்தகையவன் யோகி என்று சொல்லபடுகின்றான். 

ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு।
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஷிஷ்யதே॥ 6.9 ॥

நல்ல உள்ளம் படைத்தவன், நண்பன், பகைவன், ஒதுங்கி இருப்பவன், நடுநிலை வகிப்பவன், வெறுப்புக்கு உரியவன், உறவினர், நல்லவன், பாவி என்று அனைவரிடமும் சமபுத்தியை உடையவன் மேலானவன் . 

யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித:।
ஏகாகீ யதசித்தாத்மா நிராஷீரபரிக்ரஹ:॥ 6.10 ॥

தியான யோகத்தை நாடுபவன் யாரும் காணாமல் தனியாக இருந்துகொண்டு, புலன்களையும் உடம்பையும் வசபடுத்தி, ஆசைகளை விட்டு உடைமைகள் எதுவும் இல்லாதவனாக மனத்தை ஒன்று திரட்ட வேண்டும். 

ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந:।
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஷோத்தரம்॥ 6.11 ॥

தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:।
உபவிஷ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஷுத்தயே॥ 6.12 ॥

அசையாததும், அதிக உயரமாகவோ அதிகம் தாழ்ந்ததாகவோ அல்லாததும், துணி, தோல், தர்ப்பைப்புல் இவற்றை மேலே உடையதுமான இருக்கை ஒன்றை ஒரு சுத்தமான இடத்தில் தனக்காக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதில் அமர்ந்து மனத்தை ஒருமைபடுத்தி, பொறிபுலன்களின் செயல்களை அடக்கி, மனத்தூய்மைக்காக தியான யோகம் பழக வேண்டும். 
ஸமம் காயஷிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:।
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஷஷ்சாநவலோகயந்॥ 6.13 ॥

உடம்பு, தலை, கழுத்து இவற்றை நேராகவும் அசையாமலும் வைத்து கொண்டு, உறுதியாக அமர்ந்து, சற்று முற்றும் பார்க்காமல் தன்னுடைய மூக்கு நுனியை பார்க்க வேண்டும். 

ப்ரஷாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:।
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:॥ 6.14 ॥

என்னை குறிக்கோளாக கொண்டு அமைதியான உள்ளத்துடன், பயமின்றி, பிரம்மச்சரிய விரதத்துடன் மனத்தை வசபடுத்தி என்னிடம் வைத்து, ஆர்வத்துடன் அமர்ந்திருக்க வேண்டும். 

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ:।
ஷாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி॥ 6.15 ॥

இவ்வாறு மனத்தை ஒன்று திரட்டி, அதனை வசபடுத்திய யோகி, என்னிடம் உள்ளதும் முக்தியில் நிறைவுருவதுமான அமைதியை அடைகிறான். 

நாத்யஷ்நதஸ்து யோகோ அஸ்தி ந சைகாந்தமநஷ்நத:।
ந சாதிஸ்வப்நஷீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந॥ 6.16 ॥

அர்ஜுனா ! அதிகமாக உண்பவனுக்கு தியான யோகம் இல்லை, எதுவும் உன்னதவனுக்கும் இல்லை, அதிகமாக உறங்குபவனுக்கும் இல்லை, அதிகமாக விழித்திருப்பவனுக்கும் இல்லை. 

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு।
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா॥ 6.17 ॥

உணவிலும் உடற்பயிற்சியிலும் அளவுடன் இருப்பவனுக்கு, செயல்களில் அளவுடன் ஈடுபடுபவனுக்கு, உறங்குவதிலும் விழித்திருப்பதிலும் அளவுடன் இருப்பவனுக்கு தியான யோகம் துன்பத்தை போக்குவது ஆகிறது. 

யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே।
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா॥ 6.18 ॥

யாருடைய மனம் எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, நன்றாக வசபடுத்தபட்டு ஆன்மாவிலேயே நிலைபெருகிறதோ அவன் தியான யோகி என்று சொல்லபடுகிறான். 
ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஷேஷத:।
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத:॥ 6.24 ॥

ஷநை: ஷநைருபரமேத் புத்த்யா த்ருதிக்ருஹீதயா।
ஆத்மஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிம்சிதபி சிந்தயேத்॥ 6.25 ॥

சங்கல்பதிலிருந்து தோன்றுகின்ற ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் விட்டு, புலன்களை மனத்தால் எல்லா பக்கங்களிலிருந்தும் நன்றாக கட்டுபடுத்தி , உறுதியுடன் கூடிய புத்தியால் மனத்தை ஆன்மாவில் நிலைபெற செய்து சிறுது சிறிதாக ஓய்வு பெற வேண்டும் . வேறு எதையும் நினைக்க கூடாது. 

யதோ யதோ நிஷ்சரதி மநஷ்சம்சலமஸ்திரம்।
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஷம் நயேத்॥ 6.26 ॥

அலைபாய்வதும், ஒரு நிலையில் நிற்காததுமான மனத்தை, அது எந்தெந்த காரணங்களால் அலைகிறதோ, அவற்றிலிருந்து மீட்டு ஆன்மாவில் கொண்டு வர வேண்டும். 

ப்ரஷாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்।
உபைதி ஷாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்॥ 6.27 ॥

மிகவும் சாந்தமான மனத்தை உடைய, ரஜோ குணத்தின் வேகம் தணிந்த, தூய, இறை நிலையில் இருக்கின்ற இத்தகைய தியான யோகியை தான் மிக மேலான இன்பம் வந்தடைகிறது. 


யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ:।
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஷமத்யந்தம் ஸுகமஷ்நுதே॥ 6.28 ॥

இவ்வாறு எப்போதும் ஆன்மாவில் ஒருமைப்பட்டு புனிதம் பெற்ற யோகி, இறைவனின் தொடர்பால் வருகின்ற முடிவற்ற இன்பத்தை எளிதில் அடைகின்றான். 

ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி।
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஷந:॥ 6.29 ॥

யோகத்தில் நிலைபெற்ற எல்லாவற்றிலும் சமநோக்கு உடைய ஒருவன் தன்னை எல்லா உயிர்களிலும், தன்னிடம் எல்லா உயிர்களையும் காண்கின்றான். 

யோ மாம் பஷ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஷ்யதி।
தஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமி ஸ ச மே ந ப்ரணஷ்யதி॥ 6.30 ॥

யார் என்னை எல்லாவற்றிலும் , எல்லாவற்றை என்னிலும் காண்கின்றானோ அவனுக்கு நான் மறைவதில்லை, அவனும் எனக்கு மறைவதில்லை. 
அர்ஜுன உவாச।
அயதி: ஷ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ:।
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி॥ 6.37 ॥

அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! மனசஞ்சலத்தின் காரணமாக ஒருவன் தனது பயிற்சிகளை சரிவர செய்யவில்லை. அதன் காரணமாக அவனால் நிறைநிலையை அடைய முடியவில்லை. ஆனால் அவனிடம் சிரத்தை உள்ளது. அத்தகையவனின் கதி என்ன ? 

கச்சிந்நோபயவிப்ரஷ்டஷ்சிந்நாப்ரமிவ நஷ்யதி।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி॥ 6.38 ॥

கிருஷ்ணா ! இறைநெறியில் தவறியவன் ஆதாரம் இல்லாமல் ( இம்மை, மறுமை ) இரண்டும் கிடைக்காமல் சிதறிய மேகம் போல் அழிந்து போகிறான் அல்லவா ? 

ஏதந்மே ஸம்ஷயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஷேஷத:।
த்வதந்ய: ஸம்ஷயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே॥ 6.39 ॥

கிருஷ்ணா ! எனது இந்த சந்தேகத்திற்கு குறைவின்றி விளக்க தகுந்தவன் நீயே. இந்த சந்தேகத்தை விளக்குவதற்கு உன்னை தவிர வேறு யாரும் இல்லை. 

ஸ்ரீபகவாநுவாச।
பார்த நைவேஹ நாமுத்ர விநாஷஸ்தஸ்ய வித்யதே।
ந ஹி கல்யாணக்ருத்கஷ்சித் துர்கதிம் தாத கச்சதி॥ 6.40 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ( இறைநெறியிலிருந்து வழுவ நேர்ந்தாலும் ) அவனுக்கு இங்கோ மறு உலகிலோ அழிவு என்பதே இல்லை. மகனே ! நன்மை செய்கின்ற யாரும் இழிநிலையை அடைவதில்லை. 

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:।
ஷுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே॥ 6.41 ॥

இறைநெறியிலிருந்து வழுவியவன் புண்ணியம் செய்தவர்கள் இருக்கின்ற உலகங்களை அடைந்து அங்கே நீண்ட காலம் வாழ்ந்த பிறகு, செல்வம் நிறைந்த நல்லவர்களின் வீட்டில் பிறக்கிறான். 

அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்।
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஷம்॥ 6.42 ॥

அல்லது அறிஞர்களாகிய யோகிகளின் குலத்தில் பிறக்கின்றான். இது போன்ற பிறவி உலகில் மிகவும் அரியது. 

தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்।
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந॥ 6.43 ॥

குரு வம்சத்தில் பிறந்தவனே ! முற்பிறவியில் கிடைத்த அறிவும் அந்த பிறவியில் அவனுடனேயே இருக்கிறது. எனவே நிறைநிலையை அடைவதற்கு அதிக முயற்சி செய்கிறான். 

பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஷோ அபி ஸ:।
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஷப்தப்ரஹ்மாதிவர்ததே॥ 6.44 ॥

அவன் முயற்சி செய்யாவிட்டாலும் முற்பிறவியின் பயிற்சியாலேயே இழக்கபடுகிறான். யோகத்தின் ஆரம்ப நிலை சாதகன் கூட வினைபயனை கடந்து விடுகிறான். 

ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஷுத்தகில்பிஷ:।
அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்॥ 6.45 ॥

மிகவும் பாடுபட்டு சுயமுற்சியுடன் சாதனைகளில் ஈடுபடுகின்ற யோகி அதன் பிறகு குறைகள் நீங்க, பல பிறவிகளில் தொடர்ந்த முயற்சிகளின் நிறைவை பெற்று மேலான நிலையை அடைகிறான்.

தபஸ்விப்யோ அதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோ அபி மதோ அதிக:।
கர்மிப்யஷ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந॥ 6.46 ॥

தியான யோகி தபஷ்விகளை விட அறிஞர்களை விட செயலில் ஈடுபடுபவர்களை விட மேலானவான், எனவே அர்ஜுனா யோகி ஆவாய். 

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா।
ஷ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:॥ 6.47 ॥

யார் செயல்திறன் கலந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுகிறானோ, அவன் எல்லா யோகிகளையும் விட மேலானவன் என்பது என் கருத்து. 

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஆத்மஸம்யமயோகோ நாம ஷஷ்டோ அத்யாய:॥ 6 ॥


ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஆத்ம ஸம்யம யோகம்' எனப் பெயர் படைத்த ஆறாவது அத்தியாயம் நிறைவுற்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக