மிக நல்ல சுவையுடன் இருக்கும் பாசிப்பருப்பு மாம்பழ அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். செய்ய மிக எளிதானதும் ருசியானதுமாகும்.
தேவையான பொருட்கள்:
முந்திரி - 10திராட்சை - 10உருக்கிய நெய் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மண்டை வெல்லம் - 100 கிராம் (துருவியது)தண்ணீர் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
வறுத்த பச்சரிசி மாவு - 2 ஸ்பூன்
செய்முறை:
*
வாணலியில் நெய் 6 ஸ்பூன் ஊற்றி சூடானவுடன் முந்திரி, திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
*
பிறகு அந்த நெய்யிலேயே பாசிப்பருப்பைச் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும்.
*
மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, அது பொன்னிறமானவுடன், வேகவைத்த பாசிப்பருப்பைக் கொட்டிக் கிளறி, மாம்பழத் துண்டுகளையும் சேர்த்து அளவான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
* 1
ஸ்பூன் தண்ணீர், வெல்லப்பாகு - 1/2 கப் சேர்த்துக்கிளறி, 2 நிமிடம் கழித்து பச்சரிசி மாவு தூவிக்கிளறி, கலவை கெட்டியாகி அல்வாப்பதம் வந்தவுடன் 1 ஸ்பூன் நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சூடாகப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக