Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 செப்டம்பர், 2018

செம்பட்டை தலைமுடியா?

பெண்களுக்கு அழகே கருகருவென இருக்கும் தலைமுடிதான். சிலருக்கு தலைமுடி செம்பட்டை நிறத்தில் இருக்கும், அதனை ஸ்டைல் என்று நினைத்து அப்படி விட்டுவிடாதீர்கள். சத்துக்கள் குறைபாட்டினால் கூட முடியின் நிறம் மாறலாம், எனவே செம்பட்டை நிறத்தில் இருக்கும் முடியினை கருமையாக மாற்ற சில வழிகள் இதோ, என்ன செய்யலாம்?

 1. ஆமணக்கு எண்ணெயினை தலையில் விட்டு நல்ல மசாஜ் செய்து பின்பு குளிக்கவும், சில மாதங்களில் செம்பட்டை நிறம் கருமையாக மாறும்.

 2. தினமும் தலைக்கு குளிக்கும் முன்பு நல்ல தேங்காய்ப் பால் தேய்த்து பின்பு குளிக்கவும். நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் நன்றாக தலையில் ஊறிய பின்பு குளிக்கவும்.

3. தினமும் கட்டாயம் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வரவும். ஆலீவ் ஆயிலை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

4. முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.

5. மரிகொழுண்டு இலையையும், செம்பருத்தி இலையையும் அரைத்து, தலைக்கு தடவி குளித்து வந்தால், செம்பட்டை முடி கறுப்பாகும்..

6. காரட்டையும் எலுமிச்சம் சாற்றையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக