॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥ அத அஷ்டமோ அத்யாய:। அக்ஷரப்ரஹ்ம யோகம்(மரணத்திற்கு பின்னால்) |
அர்ஜுன உவாச। |
கிம் தத் ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம। அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே॥ 8.1 ॥ |
அர்ஜுனன் கேட்டது : மனிதருள் சிறந்தவனே ! பிரம்மம் எது ? ஆன்மா எது ? அதிபூதம் எது ? அதிதெய்வம் என்று எது சொல்லபடுகிறது ?
அதியஜ்ஞ: கதம் கோ அத்ர தேஹே அஸ்மிந்மதுஸூதந। ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோ அஸி நியதாத்மபி:॥ 8.2 ॥ |
கிருஷ்ணா ! இந்த உடம்பில் அதியஜ்ஞன் யார் ? அவர் எப்படி இருக்கிறார்?, சுயகட்டுப்பாடு உடையவர்கள் மரண காலத்திலும் உன்னை எப்படி நினைக்கிறார்கள் ?
ஸ்ரீபகவாநுவாச। |
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ அத்யாத்மமுச்யதே। பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:॥ 8.3 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: பிரம்மம் அழிவற்றது, மேலானது, அதன் இயல்பு ஆன்மா என்று சொல்லபடுகிறது. உயிர்களை உண்டாக்கி வளர செய்வதாகிய வேள்வி கர்மம் எனபடுகிறது.
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஷ்சாதிதைவதம்। அதியஜ்ஞோ அஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர॥ 8.4 ॥ |
உடல் தரித்தவர்களுள் உயர்தவனே ! அழியும் பொருள் அதிபூதம் எனபடுகிறது. உடம்பில் உறைபவன் அதிதெய்வம், இந்த உடம்பில் அதியஜ்ஞமாக நானே இருக்கின்றேன்.
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்। ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஷய:॥ 8.5 ॥ |
மரண காலத்தில் யார் என்னையே நினைத்தவாறு உடம்பை விட்டு செல்கிறானோ அவன் என் நிலையை அடைகின்றான். இதில் சந்தேகம் இல்லை.
யம் யம் வா அபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்। தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித:॥ 8.6 ॥ |
குந்தியின் மகனே ! இறுதி காலத்தில் எந்த பொருளை நினைத்தவாறு ஒருவன் உடம்பை விடுகின்றானோ, எப்போதும் அந்த பொருளையே நினைக்கின்ற அவன் அந்த பொருளையே அடைகின்றான்.
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச। மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ஷய:॥ 8.7 ॥ |
எப்போதும் என்னை நினைத்தவாறு போர் செய், என்னிடம் மனத்தையும் புத்தியையும் சமர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்.
அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா। பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந்॥ 8.8 ॥ |
அர்ஜுனா ! மனத்தால் வேறு எதையும் நாடாமல் மேலான ஒளிமயமான இறைவனை இடைவிடாமல் தியானிப்பவன் அவரை அடைகிறான்.
கவிம் புராணமநுஷாஸிதாரம் அணோரணீயம்ஸமநுஸ்மரேத்ய:। ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூபம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத்॥ 8.9 ॥। । ப்ரயாணகாலே மநஸா அசலேந பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ। ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஷ்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்॥ 8.10 ॥ |
எல்லாம் அறிந்தவனை, ஆதிபரம்பொருளை, அனைத்தையும் ஆள்பவனை, அனுவைவிட நுண்ணியவனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாத வடிவம் உடையவனை, இருளுக்கு அப்பாற்பட்டவனை, புருவ நடுவில் பிராணனை நன்றாக நிலைநிறுத்தி, பக்தியுடனும் யோக ஆற்றலுடனும், அசைவற்ற மனத்துடன் மரண காலத்தில் யார் நினைகின்றானோ அவன் அந்த ஒளிமிக்க மேலான இறைவனையே அடைகிறான்.
யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விஷந்தி யத்யதயோ வீதராகா:। யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் ஸம்க்ரஹேண ப்ரவக்ஷ்யே॥ 8.11 ॥ |
வேதத்தை அறிந்தவர்கள் எதை ஓங்காரம் என்கிறார்களோ, பற்று நீங்கிய துறவிகள் எதை அடைகிறார்களோ, எதை விரும்புபவர்கள் பிரம்சரியத்தை கடைபிடிக்கிறார்களோ அந்த மந்திரத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.
ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச। மூத்ந்யா। ர்தாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்॥ 8.12 ॥ ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந்। ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்॥ 8.13 ॥ |
உடம்பின் வாசல்கள் அனைத்தையும் அடக்கி, மனத்தை இதயத்தில் நிறுத்தி, பிராணனை உச்சந்தலையில் குவித்து, யோக தாரணியில் நிலைபெற்று, பிரமம்மாகிய ஓம் என்னும் ஓரெழுத்து மந்திரத்தை உச்சரித்துகொண்டு, என்னை நினைத்தவாறு உடம்பை விட்டு யார் போகிறானோ அவன் மேலான நிலையை அடைகிறான்.
அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஷ:। தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:॥ 8.14 ॥ |
அர்ஜுனா ! வேறு எண்ணம் இல்லாமல் நீண்ட காலம் என்னை யார் எப்போதும் நினைக்கிறானோ, ஒருமுகப்பட்ட நிலையில் நிலைபெற்ற அந்த யோகிக்கு நான் எளிதில் அகபடுகிறேன்.
மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமஷாஷ்வதம்। நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா:॥ 8.15 ॥ |
உயர்ந்த பக்குவம் பெற்ற மகான்கள் என்னை அடைந்து துக்கத்தின் இருப்பிடமும் நிலையற்றதுமாகிய பிறவியை மீண்டும் அடைவதில்லை.
ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திநோ அர்ஜுன। மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே॥ 8.16 ॥ |
அர்ஜுனா ! பிரம்மலோகம் வரையுள்ள அனைத்து உலகங்களில் இருப்பவர்களும் மீண்டும் பிறந்தேயாக வேண்டும்.குந்தியின் மகனே ! என்னை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.
ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விது:। ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தே அஹோராத்ரவிதோ ஜநா:॥ 8.17 ॥ |
ஆயிரம் யுகங்கள் பிரம்மாவின் பகல், ஆயிரம் யுகங்கள் இரவு, இதனை அறிபவர்கள் பகலையும் இரவையும் அறிந்தவர்கள். உலகத்தின் ஆரம்பம் மற்றும் அழிவின் கணக்கீடு:
{
மனிதனின் ஒரு வருடம் = தேவர்களின் ஒரு நாள்
( தேவர்களின் பகல் நேரம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –உத்தராயணம் )
( தேவர்களின் இரவு நேரம் = சூரியன் தெற்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –தட்சினாயணம் )
365 தேவர்களின் நாள் = 1 தேவர்களின் வருடம்
4800 தேவர்களின் வருடம் = கிருத யுகம் / சத்ய யுகம்
3600 தேவர்களின் வருடம் = திரேத யுகம்
2400 தேவர்களின் வருடம் = துவப்பார யுகம்
1200 தேவர்களின் வருடம் = கலி யுகம்
12000 தேவர்களின் வருடம் = 1 சதூர் யுகம்
1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு பகல் பொழுது
1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு இரவு பொழுது
14 மனுக்கள் இந்த பிரபஞ்சத்தை தலைமை வகிப்பார்கள்
ஒரு மனுவின் காலம் = ஒரு மன்வந்த்ரம்
பிரம்மா வின் ஒரு பகல் + பிரம்மா வின் ஒரு இரவு = பிரம்மா வின் ஒரு நாள்
பிரம்மா வின் 365 நாட்கள் = பிரம்மா வின் ஒரு வருடம்
பிரம்மா வின் வாழ் காலம் = 100 பிரம்ம வருடங்கள்
பிரம்மா வின் வாழ் காலம் முடிவு = மகாப்ரலயம் ( மொத்த உலகத்தின் அழிவு )
பிரம்மா வின் வாழ்காலத்தின் முடிவில் மகாப்ரலயம் நிகழும்.அப்போது பிரம்மாவும் அழிக்கபடுவார். அதன் பிறகு 100 பிரம்மா வருடங்களுக்கு ஒரு உருவாக்கமும் இருக்காது. பிறகு பகவான் விஷ்ணு மீண்டும் ஒரு பிரம்மா வை உருவாக்குவார். பிறகு உருவாக்கம் தொடரும்.
கல்பம் / உருவாக்கம் = பிரம்மா வின் ஒரு பகல் பொழுது = 4320 மில்லியன் மனித வருடங்கள்
ப்ரலயம் / அழிவு = பிரம்மாவின் ஒரு இரவு பொழுது = 4320 மில்லியன் மனித வருடங்கள்
நான்கு யுகங்களின் சுழற்சி ஆயிரம் முறை நடப்பது ஒரு கல்பம் ஆகும்.
சத்ய யுகம் = 1728,000 மனித வருடங்கள் : 100 % நன்மக்கள் ; 0 % தீயமக்கள்
திரேத யுகம் = 1296,000 மனித வருடங்கள் : 75 % நன்மக்கள் ; 25 %தீயமக்கள்
துவப்பார யுகம் = 864,000 மனித வருடங்கள் : 50% நன்மக்கள் ; 50 %தீயமக்கள்
கலியுகம் = 432,000 மனித வருடங்கள் : 25 % நன்மக்கள் ; 75 % தீயமக்கள்
ஒவ்வொரு கல்பமும் 14 மன்வந்த்ரம்( காலம்) ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மன்வந்த்ரமும் 71 சுழற்சி வரை நீடிக்கும்.
ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு தலைமை வகிக்கிறான்.
}
அவ்யக்தாத் வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே। ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே॥ 8.18 ॥ |
( பிரம்மாவின் ) பகல் வரும் போது தோன்றா நிலையிலிருந்து (பிரபஞ்சம் முதலான ) எல்லா தோற்றங்களும் வெளிபடுகின்றன. இரவு வரும் போது அவ்யக்தம் என்ற பெயருடைய அதன் உள்ளேயே ஒடுங்குகிறது.
பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே। ராத்ர்யாகமே அவஷ: பார்த ப்ரபவத்யஹராகமே॥ 8.19 ॥ |
அர்ஜுனா ! உயிர் கூட்டம் தன்வசமின்றி பிறந்து பிறந்து இரவு வரும் போது ஒடுங்குகின்றன. பகல் வரும் போது வெளிபடுகின்றன.
பரஸ்தஸ்மாத்து பாவோ அந்யோ அவ்யக்தோ அவ்யக்தாத்ஸநாதந:। ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நஷ்யத்ஸு ந விநஷ்யதி॥ 8.20 ॥ |
தோன்றா நிலையில் உள்ள இந்த படைப்பை விட மேலானதாக, வேறானதாக, தோன்றாததாக, அழிவற்றதாக யார் உள்ளாரோ, அவர் எல்லா உயிர்களும் அழிந்தாலும் அழிவதில்லை.
அவ்யக்தோ அக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம்। யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம॥ 8.21 ॥ |
தோன்றாதவர், அழிவற்றவர், என்று சொல்லபடுகின்ற அவரை அடைவதை மேலான நிலை என்று சொல்கின்றனர். எதை அடைந்து திரும்பி வருவதில்லையோ அது எனது மேலான இருப்பிடம்.
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா। யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்॥ 8.22 ॥ |
அர்ஜுனா ! உயிர்கள் யாருள் இருக்கின்றனவோ, யாரால் இவை அனைத்தும் வியாப்பிக்கபட்டு இருக்கின்றனவோ அந்த மேலான இறைவன் வேறு நோக்கமற்ற பக்தியால் அடையபடுகிறார்.
யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகிந:। ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப॥ 8.23 ॥ |
பரத குல பெருமகனே ! எந்த காலத்தில் இறக்கின்ற யோகிகள் திரும்பி வரமாட்டார்கள், எந்த காலத்தில் இறப்பவர்கள் திரும்பி வருவார்கள் என்கிற விவரத்தை உனக்கு சொல்கிறேன் .
அக்நிர்ஜோதிரஹ: ஷுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்। தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா:॥ 8.24 ॥ |
தீ, சுடர், பகல், வளர்பிறை காலம், ஆறு மாத காலமாகிய உத்தராயணம் –இந்த வேளையில் உடலை விட்டு போகின்ற பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை அடைகிறார்கள்.
தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம்। தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே॥ 8.25 ॥ |
புகை, இரவு, தேய்பிறை காலம், ஆறு மாத காலமாகிய தட்சிணாயணம் –இந்த வேளையில் உடலை விட்டு போகின்ற யோகி சந்திர ஒளியை அடைந்து திரும்பி வருகிறான்.
ஷுக்லக்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஷாஷ்வதே மதே। ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந:॥ 8.26 ॥ |
ஒளியும் இருளுமாகிய இந்த வழிகள் உலகில் என்றென்றும் உள்ளவை என்று கருதபடுகின்றன. ஒன்றினால் பிரவமையை அடைகின்றான். மற்றொன்றினால் மீண்டும் பிறக்கிறான்.
நைதே ஸ்ருதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஷ்சந। தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந॥ 8.27 ॥ |
குந்தியின் மகனே அர்ஜுனா ! இந்த இரண்டு வழிகளையும் அறிகின்ற எந்த யோகியும் குழப்பம் அடைவதில்லை. ஆகையால் எப்போதும் யோகத்தில் நிலைபெற்றவனாக ஆவாய்.
வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம்। அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம்॥ 8.28 ॥ |
வேதங்களை படிப்பதற்கும், வேள்விகள் செய்வதற்கும், தவத்திற்கும், தானத்திற்கும் எந்த புண்ணிய பலன் சொல்லபட்டிருக்கிறதோ, யோகி அவற்றை அறிந்து, அவற்றையெல்லாம் கடந்து செல்கிறான். ஆதியும் மேலானதுமான இடத்தை அடைகிறான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே அக்ஷரப்ரஹ்மயோகோ நாமாஷ்டமோ அத்யாய:॥ 8 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அக்ஷரப்ரஹ்ம யோகம்' எனப் பெயர் படைத்த எட்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.
விளக்கம்:
மனித உடல் அதிபூதம் என்று அழைக்கபடுகிறது. இது அழியும் தன்மை உடையது. அதன் உள்ளே இருக்கின்ற ஆத்மா ( இறைவன் ) அழியமாட்டார். மனிதன் இறக்கும் போது எதை நினைத்தவாறு இறக்கிறானோ அதையே அடுத்த பிறவியில் அடைகிறான். இறைவனையே நினைத்தவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக இறைவனையே அடைகிறான். எந்த வேலை செய்தாலும் மனதளவில் இறைவனை நினைத்தவாறு செய்பவன் இறைவனையே அடைகிறான்.
மேலும் நமது உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கட்டுபடுத்தி மனத்தை நிலைநிறுத்தி மூச்சை (அல்லது ) பிராணனை உச்சந்தலையில் குவித்து “ஓம்” என்ற மந்திரத்தை சொன்னவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக மேலான நிலையை அடைகிறான்.
மனித உடல் அதிபூதம் என்று அழைக்கபடுகிறது. இது அழியும் தன்மை உடையது. அதன் உள்ளே இருக்கின்ற ஆத்மா ( இறைவன் ) அழியமாட்டார். மனிதன் இறக்கும் போது எதை நினைத்தவாறு இறக்கிறானோ அதையே அடுத்த பிறவியில் அடைகிறான். இறைவனையே நினைத்தவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக இறைவனையே அடைகிறான். எந்த வேலை செய்தாலும் மனதளவில் இறைவனை நினைத்தவாறு செய்பவன் இறைவனையே அடைகிறான்.
மேலும் நமது உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கட்டுபடுத்தி மனத்தை நிலைநிறுத்தி மூச்சை (அல்லது ) பிராணனை உச்சந்தலையில் குவித்து “ஓம்” என்ற மந்திரத்தை சொன்னவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக மேலான நிலையை அடைகிறான்.
இந்த உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்றால், முதலில் பகவான் நாராயணன் பிரம்ம தேவனை உருவாக்கினார். பிறகு பிரம்ம தேவனுக்கு தெய்வீக அறிவுகளை புகட்டி உயிரினங்களை உருவாக்குமாறு கூறினார். அதன்படி பிரம்மன் அவருடைய பகல் பொழுதில் உயிரினங்களை உருவாக்குவார். இரவு வரும் போது அவர் உருவாக்கத்தை நிறுத்திவிடுவார். அந்த இரவின் போது உலக அழிவு ஏற்படும். அனைத்து உயிரினங்களும் அழிவு நோக்கி செல்லும். மீண்டும் பகல் வரும்போது அவர் உருவாக்கத்தை ஆரம்பிப்பார். இவ்வாறு உயிரின கூட்டம் எந்த வித சுயகட்டுபாடும் இல்லாமல் உருவாகியும் அழிந்தும் போகின்றன. இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பிறப்பு – இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். அதாவது பிறப்பு – இறப்பு இல்லாத அந்த தெய்வீக லோகத்தை அதாவது பிரம்மத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். மேலும் உத்தராயனத்தில் இறப்பவர்கள் மீண்டும் பிறப்பது இல்லை. தட்சினாயனத்தில் இறப்பவர்கள் மீண்டும் பிறப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக