தேவையானவை:
- சாமை அரிசி - ஒரு குவளை
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊறவிடவும். ஊறிய அரிசியை நன்கு மிருதுவாக, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மாவு கெட்டியாக இருப்பது நல்லது. உடனே இந்த மாவை இட்லித் தட்டில், இட்லி போல நன்கு வேகவிடவும். பிறகு இதனை, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.
பலன்கள்:
- சாமையில் நார்ச் சத்து அதிகம் உள்ளது.
- குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
- சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
- எண்ணெய் சேர்க்காமல், நீராவியில் வேகவைப்பதால், உடலுக்கு நன்மை பயக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக