தேவையானவை:
- தினை அரிசி மாவு - 200 கிராம்
- வெல்லம் - 200 கிராம்
- ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி
- சுக்குத்தூள் - 2 சிட்டிகை
- முந்திரி
- திராட்சை
- பாதாம் பருப்பு - தலா 10 கிராம்
- நெய் - 100 கிராம்.
செய்முறை:
தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும். இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.
பலன்கள்:
- புரதச் சத்து, மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் நிறைந்த சிறுதானியம் இது.
- இதனுடன் இனிப்புப் பொருள் சேர்ப்பதால், அதில் உள்ள நுண் சத்துக்கள் அதிகமாகும்.
- வைட்டமின்கள் நிறைந்த உணவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக