Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

5. இரண்டாவது ஸர்க்கம் - இரவில் இலங்கைக்குள் நுழைதல்


Image result for இரவில் இலங்கைக்குள் நுழைதல்


அனாயாசமாகக் கடலைத் தாண்டி எவராலும் செய்ய முடியாத செயலைச் செய்த அனுமான் திரிலோக மலைச் சிகரத்தில் அமைந்திருந்த இலங்கை நகரத்தை வியப்புடன் நோக்கினார்தாம் சொன்னதைச் செய்து முடித்த அந்த வெற்றி வீரர் சுற்றியிருந்த மரங்களிலிருந்து தம் மீது விழுந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  அந்த இலங்கை மண் மீது பிரகாசமாக ஒளிர் விட்டு நின்றார்.

நூறு யோஜனை தூரம் கடல் மீது பயணம் செய்த அலுப்பு சிறிதும் அவரிடம் இல்லைநன்றாக மூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் கூட அவர் முயலவில்லை.

"
என்னால் பல நூறு யோஜனைகளைத் தாண்ட முடியும்இந்த நூறு யோஜனை எனக்கு எம்மாத்திரம்!" என்று அவர் தனக்குள் நினைத்துக் கொண்டார்சக்தி படைத்தவர்களில் மிகச் சிறந்தவரும்அதிவேகம் கொண்டவருமான அந்த வானர வீரர் இலங்கை நகரத்தை நோக்கி நடந்தார்.

அவர் நடந்து சென்ற சாலையின் இரு மருங்கிலும் பசுமையான புல்வெளிகளும்பாறைகள் மிகுந்த  மலர்வனங்களும் இருந்தனமலர்களின் மணத்தைச் சுமந்து வந்த காற்று இதமாக வீசியதுபல உயரமான சிகரங்களைக்கொண்ட மலையின் மீது நின்ற வாயுபுத்திரர் சோலைகளும் காடுகளும் நிறைந்த இலங்கையைக் கண்ணுற்றார்.

தேவதாருகர்ணீகாரம்பேரிச்சைப்ரியாளம்முச்சுலிந்தம்குடஜம்கேடகம்ப்ரியங்குநீபம்சப்தசாடம் போன்ற மரங்களை அவர் அங்கே பார்த்தார்ஆசனம்கோவித்ரம்கரவீரம் போன்ற பூத்துக் குலுங்கிய மரங்களையும் அவர் பார்த்தார்ஏராளமான பூக்களும்இலைகளும்   நிறைந்த மரக்கிளைகளில் பலவகைப் பறவைகள் கிளைகளில் அமர்ந்திருக்ககாற்றில் ஆடிக் கொண்டிருந்த பல மரங்களையும் அவர் பார்த்தார்அன்னப்பறவைகள்நீர்ப்பறவைகள்தாமரைகள் மற்றும்வேறு பல நீர்த்தாவரங்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்த பல குளங்களும் நீர்நிலைகளும் அங்கே மிகுந்து காணப்பட்டனசில ஏரிகளைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும்கண்ணுக்கினிய பூஞ்சோலைகளும்  அமைந்திருந்தன.

ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்குள் நுழையத் தயாரானார் அந்தப் புகழ் பெற்ற வானர வீரர்ராவணனால் கடத்தப்பட்ட சீதை அங்கே காவலில் வைக்கப்பட்டிருந்ததால்ராவணன் உள்ளிட்ட சிறந்த வில்லாளிகளாலும்இரவும் பகலும் உலவிக்கொண்டிருந்த காவலாளிகளாலும் பாதுகாக்கப்பட்டு வந்தது அந்த இலங்கைஅந்த நகரம் எல்லாப்புறமும் அகழிகளால் சூழப் பட்டிருந்ததுநீலத்தாமரைகள் நிறைந்திருந்த அந்த அகழியின் சுவர்கள் தங்கத்தால் இழைக்கப் பட்டிருந்தன.

அந்த நகரத்தில் இருந்த வீடுகள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒரு கிரகம் போல அற்புதமாகத் தோற்றமளித்தனசாலைகள் அகலமாகவும்சுத்தமாகவும்மேட்டுப்பாங்காகவும் இருந்தனவீடுகளின் நுழைவாயிலில் கொடிகள் படர்ந்திருந்தனஎதிரிகள் யாரும் உள்ளே நுழைந்தால் அவர்களை நோட்டமிட ஏதுவாக உயரமான மேடைகள் ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்தனஎங்கு பார்த்தாலும் கொடிகளும்தோரணங்களும் தொங்கினஹனுமான் கண்ணுற்ற அந்த இலங்கை நகரம்எல்லா விதத்திலும் தேவலோகத்தை விஞ்சி நின்றது.

மலை உச்சியிலிருந்து பார்த்தபோது அந்த இலங்கை நகரின் பல கட்டிடங்கள் ஆகாயத்திலிருந்து தொங்கிக்கொண்டிருப்பது போல் காட்சியளித்தனவிஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டுராவணனால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த நகரம்   ஆகாயத்தில் மிதப்பதுபோலத் தோன்றியதுபாறைகளின் அடித்தளத்தில் அமைக்கப்பட்ட சுவர்கள் அந்த நகரத்தின்  இடுப்புப் பகுதி போலவும்நீர் நிறைந்த அகழிகள் ஆடை போலவும்சுவர்களின் மீது பொருத்தப்பட்டிருந்த சூலங்கள்பீரங்கிகள் போன்ற ஆயுதங்கள் ரோமங்களைப் போலவும்நுழைவாயில்கள் காதணிகள் போலவும் தோற்றமளித்தன.

விஸ்வகர்மாவால் கவனமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட அந்நகரம் கைலாச மலையின் ஒரு சிகரம்போல் தோற்றமளித்ததுஅடுக்கடுக்காக மேலே எழும்பியிருந்த கட்டிடங்கள் ஆகாயத்தில் பறப்பதுபோலத் தோற்றமளித்தனபாம்புகளின் நகரமான போகவதி பாம்புகளால் நிறைந்திருந்தது போல்அந்த நகரம் பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கர்களால் நிரம்பியிருந்ததுபாம்புகள் தங்கள் இருப்பிடத்தைக் காவல் புரிவது போல்சூலங்கள்ஈட்டிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்கி நின்ற ராட்சஸர்கள் குபேரனால் உருவாக்கப்பட்ட அந்த நகரத்தைக் காவல் புரிந்தனர்.

கற்பனைக்கெட்டாத அளவுக்கு விரிந்திருந்த அந்த நகரத்தின் வடக்கு நுழைவாயிலை அணுகிய ஹனுமானின் மனதில் சில எண்ணங்கள் தோன்றின.


"
வானரச் சேனையால் கடலைக் கடந்து இந்த இடத்தை அடைய முயன்றாலும்அதனால் பயன் இருக்காதுஏனெனில் தேவர்களால் கூட இந்த இலங்கையைப் போரில் வெல்ல முடியாதுஅரக்கர் குல அரசன் ராவணனால் பாதுகாக்கப்பட்டு வரும் இலங்கைக்குள் நுழைவது மாவீரரான ராமரால் கூட இயலாதுஇந்த அரக்கர்களை நல்ல வார்த்தை பேசியோவிலை உயர்ந்த பரிசுகளை அளித்தோநயமாகப் பேசியோ வழிக்குக் கொண்டு வர முடியாதுஇவர்களுடன் போர் புரிவது என்ற பேச்சுக்கே இடமில்லைபலம் பொருந்திய வானரர்களில் கூடவாலியின் மகன் அங்கதன்நீலன்எங்கள் அரசன் சுக்ரீவன்நான் ஆகிய நான்கு பேரால்தான் கடலைக் கடந்து இங்கே வர முடியும்எப்படியிருந்தாலும்ஜனகபுத்ரியான வைதேஹி உயிருடன் இருக்கிறாரா என்பதை நான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம்"

ராமருக்கு நன்மை செய்வதற்கே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட அந்த வானரச் செம்மல்அந்த மலைச் சிகரத்தின் மீது நின்றபடி மேலும் யோசனை செய்தார்.


"
கொடூரமான அரக்கர்களால் காவல் காக்கப்பட்டு வரும் இந்த இலங்கைக்குள் என்னால் இந்த உருவத்துடன் நுழைய முடியாதுகொடூர குணம் கொண்டபலம் வாய்ந்த  இந்த அரக்கர்கள் போரை விரும்புபவர்கள்எனவே எனக்குள்ள ஒரே வழி  இவர்களைத் தந்திரத்தினால் வெல்வதுதான்யார் கண்ணுக்கும் புலப்படாத உருவத்தை எடுத்துக் கொண்டுதான் இரவு நேரத்தில் இலங்கைக்குள் புகுந்து அங்கே சீதையைத் தேட வேண்டும்நான் செய்ய வேண்டிய பெரும் பணியைத் துவக்க இதுதான் சரியான தருணம்."

இலங்கை நகரத்தை தேவர்களாலோஅசுரர்களலோ வெல்ல முடியாது என்று உணர்ந்த ஹனுமான் மூச்சை ஒருமுறை ஆழமாக இழுத்து விட்டு விட்டுமீண்டும் சிந்திக்கத் தொடங்கினார்:


தீய மனம் கொண்ட அரக்கர் தலைவன் ராவணனுக்குத் தெரியாமல் சீதையைத் தேடிக் கண்டு பிடிக்க என்ன வழியைக் கடைப்பிடிக்கலாம்சீதை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து வருவதாக ராமருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆக வேண்டும்ஆனால் எந்த ஒரு உதவியும் இல்லாமல் சீதை இருக்குமிடத்தை நான் தேடிக் கண்டு பிடிப்பது எப்படிஒரு வேலை செய்து முடிக்கக் கூடியதாக இருந்தாலும்இடம் பொருள் அறிந்து செயல் பட முடியாத மன உறுதியற்ற ஒருவன் அதில் ஈடுபட்டால்கிடைத்திருக்க வேண்டிய வெற்றி பகலவன் முன்பு கரையும் இருளைப்போல் காணாமல் போய் விடும்ஒரு திட்டம் நன்கு உருவாக்கப்பட்டிருந்தாலும்தன் திறமையில் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவனால் செயல்படுத்தப் படும்போதுஅத்திட்டம்  வெற்றி பெறாமல் போகக் கூடும்.

"
செய்யும் காரியத்தில் தோல்வி ஏற்படாமல் தவிர்ப்பது எப்படிதவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது எப்படிநான் இந்தக் கடலைக் கடந்து வந்தது வீணாகப் போகாமல் பார்த்துக் கொள்வது எப்படிஎன்னை அரக்கர்கள் யாராவது பார்த்து விட்டால்ராமபிரானால் ராவணனை அழிக்க முடியாமல் போய் விடும்நான் அரக்க உருவம் எடுத்துக்கொண்டால் கூட யாராவது என்னைக் கண்டு பிடித்து விடக் கூடும்வேறு ஏதாவது உருவம் எடுத்துக் கொண்டால் என்னை இன்னும் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.

"
வாயு பகவான் கூட இங்கே யார் கண்ணுக்கும் புலப்படாமல் உலவ முடியாது என்று தோன்றுகிறதுசக்தி வாய்ந்த இந்த அரக்கர்களின் கண்களுக்கு எதுவுமே தப்பாதுநான் என் சுய உருவத்துடன்  இங்கே இருந்தால்நான் கொல்லப்படுவது நிச்சயம்என் எஜமானரின் நோக்கம் நிறைவேறாமலேயே போய் விடும்.  அதனால் ஒரு சிறிய குரங்கின் வடிவம் எடுத்துக்கொண்டுராமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்இரவு நேரத்தில் இந்த நகரத்துக்குள் நுழைவேன்எவராலும் உள்ளே புக முடியாத ராவணின் நகரத்துக்குள் இரவில் நுழைந்துஒவ்வொரு வீடாகத் தேடிஜனகரின் மகளான சீதையைக் கண்டு பிடிப்பேன்."

விதேஹ நாட்டு இளவரசியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இவ்வாறு தன் மனதுக்குள் உறுதி செய்துகொண்ட ஹனுமான் சூரியன் மறைவதற்காகக் காத்திருந்தார்சூரியன் மறைந்து இருள் படரத் தொடங்கியதும் வாயுபுத்திரரான ஹனுமான் ஒரு சிறிய குரங்கின் வடிவத்தை எடுத்துக் கொண்டு,அகலமான சாலைகள் கொண்ட இலங்கைக்குள் தாவிக் குதித்துப் பிரவேசித்தார்.



பெரிய வீடுகள்தங்கத்தாலும்வெள்ளியாலும் இழைக்கப்பட்ட தூண்கள்தங்கத்தால் இழைக்கப்பட்ட ஜன்னல்கள்ஏழெட்டு தளங்கள் கொண்ட கட்டிடங்கள்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தால் இழைக்கப்பட்ட வராந்தாக்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த நகரம் கந்தர்வர்களின் நகரத்தை ஒத்திருந்ததுஅரக்கர்களின் வீடுகள் வைடூரியத்தால் இழைக்கப்பட்ட நடைபாதைகளைக் கொண்டும்முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் அற்புதமாகத் தோன்றின.

தங்க வேலைப்பாடுகள் மிகுந்த இலங்கை மனம் கவரும் தோற்றத்தைக் கொண்டிருந்தது.

பல அடுக்குகளைக் கொண்டிருந்த கட்டிடங்கள்தங்கத்தால் வேலைப்பாடு செய்யபட்டிருந்த முற்றங்கள்காவலுக்கு நின்ற அரக்கர்கள் ஆகியவை பிரமிப்பூட்டும் விதமாக இருந்ததை ஹனுமான் ரசித்தார்.


அப்போது ஹனுமானுக்கு உதவி செய்யவே வந்தது போல் நட்சத்திரங்கள் சூழ வானில் எழுந்த  நிலா  தன் குளிர்ச்சியான வெளிச்சத்தால் உலகுக்கு அழகூட்டியதுசங்கைப் போன்றும்பாலைப் போன்றும்  வெண்மையாக இருந்த சந்திரன் வானில் உயரே எழுந்தபோது தாமரைக் குளத்தில் நீந்தும் அன்னத்தைப்போல் தோற்றமளித்தது




என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக