காளை வகைகள்:
1. அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3. அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை
11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. செவலை எருது
17. செம்ம பறையன்
18. செந்தாழைவயிரன்
19. சொறியன்
20. தளப்பன்
21. தல்லயன்காளை
22. தறிகொம்பன்
23. துடைசேர்கூழை
24. கட்டைக்கொம்பன்
25. கருங்கூழை
26. கழற்வாய்வெறியன்
27. கழற்சிக்கண்ணன்
28. கருப்பன்
29. காரிக்காளை
30. காற்சிலம்பன்
31. காராம்பசு
32. குட்டைசெவியன்
33. குண்டுக்கண்ணன்
34. குட்டைநரம்பன்
35. குத்துக்குளம்பன்
36. குட்டைசெவியன்
37. குள்ளச்சிவப்பன்
38. கூழைவாலன்
39. தூங்கச்செழியன்
40. வட்டப்புல்லை
41. வட்டச்செவியன்
42. வளைக்கொம்பன்
43. வள்ளிக்கொம்பன்
44. வர்ணக்காளை
45. வட்டக்கரியன்
46. வெள்ளைக்காளை
47. கூடுகொம்பன்
48. கூழைசிவலை
49. கொட்டைப்பாக்கன்
50. கொண்டைத்தலையன்
51. ஏரிச்சுழியன்
52. ஏறுவாலன்
53. நாரைக்கழுத்தன்
54. நெட்டைக்கொம்பன்
55. நெட்டைக்காலன்
56. படப்பு பிடுங்கி
57. படலைக் கொம்பன்
58. பட்டிக்காளை
59. பனங்காய் மயிலை
60. பசுங்கழுத்தான்
61. பால்வெள்ளை
62. வெள்ளைக்குடும்பன்
63. வெள்ளைக்கண்ணன்
64. வெள்ளைப்போரான்
65. மயிலைக்காளை
66. வெள்ளை
67. கழுத்திகாபிள்ளை
68. கருக்காமயிலை
69. பணங்காரி
70. பொட்டைக்கண்ணன்
71. பொங்குவாயன்
72. போருக்காளை
73. மட்டைக் கொலம்பன்
74. மஞ்சள் வாலன்
75. மறைச்சிவலை
76. மஞ்சலி வாலன்
77. மஞ்ச மயிலை
78. மயிலை
79. மேகவண்ணன்
80. முறிகொம்பன்
81. முட்டிக்காலன்
82. முரிகாளை
83. சங்குவண்ணன்
84. செம்மறைக்காளை
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு
91. எருமைமாடு
92. காரிமாடு.
· காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை
இழுக்கும் திறன் கொண்டவை. கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும்
தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல்
கடுமையான வெயில், பஞ்சக் காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை,
கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.
"நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன்,
அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக்
காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும்
காங்கேயம் காளைகள். எந்தச் சந்தேகமும் இல்லாமல்
காங்கேயம் காளை, நம் மண்ணின் பெருமிதம்தான்."
· காங்கேயம் மட்டுமின்றி
உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர் மலை மாடு, தேனி மலை மாடு போன்றவையும் நம் மரபின்
பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பவையே. தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஆறு
மரபார்ந்த மாட்டினங்களில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த
ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.
· மற்ற உள்ளூர் மாட்டினங்களின்
நிலையும் மகிழ்ச்சியடைய வைக்கும் நிலையில் இல்லை. நம்முடைய மாட்டினங்கள் வேகமாக
அழிந்துவருவதற்கு, அவற்றின் பெருமைகள் சரியாக உணரப்படாததே முக்கியக் காரணம்.
· உள்ளூர் மாட்டினங்களின்
இனப்பெருக்க நடைமுறைகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு ஒருபுறம் கண்மூடித்தனமாக
எதிர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் காலம்காலமாகக் கிடைத்துவந்த ஆதரவையும்
பராமரிப்பையும் வேகமாக இழந்துவரும் உள்ளூர் மாட்டினங்கள் அழிவை நோக்கி நகர்ந்து
வருகின்றன.
· மாடுகளின் புகைப்படங்கள் போட்டு
ரூபாய் நாணயங்கள் 1954 காலகட்டத்தில் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில்
இருந்துள்ளது.ஒரண்ணா, இரண்டனா போன்ற ரூபாய் நாணயங்களில் காளை மாடுகளின்
புகைப்படங்களை அச்சட்டிக்கப்பட்டிருந்தன.ஒரு பக்கம் காளையின் படமும், மறு பக்கம்
மூன்று தலை சிங்கத்தின் படமும் அதில் இருந்துள்ளது.இந்த நாணயங்கள் காலப்போக்கில்
மறைந்து விட்டன.
·
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக