Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 மே, 2019

ஏழு அடி

திருமணம் ஏழு அடி... இவ்வளவு விஷயம் இருக்கா
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனைகள்...!!
 அக்னியை சுற்றி க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்

திருமணத்தின்போது மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டிய பின்பு அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பது நம்முடைய முன்னோர்கள் காலம் முதல் இன்றுவரை பின்பற்றப்பட்டு வரும் சாஸ்திர சம்பிரதாயமாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும்போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்குத் துணையிருப்பான் என்று தன்னுடைய பிரார்த்தனையைச் சொல்கிறான்!

முதல் அடியில் : பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடியில் : ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடியில் : நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடியில் : சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடியில் : லட்சுமி கடாட்சம் பெற வேண்டும்.

ஆறாவது அடியில் : நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடியில் : தர்மங்கள் நிலைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூட்சமமான மனோவியல் விஷயத்தை சாஸ்திரத்தில் உணர்த்தி உள்ளார்கள் நம்முடைய முன்னோர்கள்.

இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சிநேகிதம் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

உதாரணமாக, நாம் சாலையில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும்போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.

ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டி சென்று விடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் இருவரும் ஒன்றாக நடக்க மாட்டோம்.

இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும் என்பது ஒரு சூட்சமமான விஷயம் ஆகும்.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக