Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 மே, 2019

முதலுதவிப் பெட்டி

முதலுதவிப் பெட்டி க்கான பட முடிவு





இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


முதலுதவிக்கு இன்றி அமையாதது. முதல் உதவிப் பெட்டி. அவசியம் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டியது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் இப்பெட்டி காலியாக இருப்பது வருத்தத்திற்கு உரியதாகும்.
இது இந்நாட்டு மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது.

காயம்பட்டவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்யாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். 

முதலுதவிப்பெட்டியில் அவசியம் இருக்க வேண்டிய பொருட்கள்:

  • மென்மையான துணி : இது காயத்தை தூய்மை செய்ய,
  • துணிச்சுருள் : இது காயத்தின் ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவதற்காக கட்ட
  • கிருமிநாசினி : காயத்தினை சுத்தம் செய்ய
  • முக்கோண வடிவ பான்டேஜ் (எலும்பு முறிவு போன்றவற்றிற்கு தேவைப்படும்)
  • பிசின் நாடாக்கள்
  • தீப்புணுக்கான கிரீம்

மேற்கண்டவை தவிர, முதலுதவிப்பெட்டியில் உள்ள பொருட்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்டவருக்கு கொடிய தொத்து வியாதிகளை (infections) தந்து முதல் உதவியின் நோக்கத்தையே கெடுத்து விடும்.

முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய மேலும் சில கருவிகளும் உபகரணங்களும்:-

1. காயக் கத்திரி : இது துணியை வெட்டவும் மற்ற பொதுத் தேவைக்குமானது. (கத்தரிக்கோல் அதிகம் பயன்படுவதில்லை எனினும் சில இடங்களில் தேவைப்படும்)

2. சாமணங்கள்

3. தீமூட்டி, இது சாமணங்களையும் இடுக்கிகளையும் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகின்றன
.
4. ஆல்கஹால் அட்டைகள் : உபகரணத்தையோ அல்லது கிழிந்த தோலையோ கிருமி நீக்கம் செய்யப் பயன்படுகின்றன. இது சில நேரம் காயங்களிலிருந்து அன்னியப் பொருள் அல்லது சிதைந்த திசுக்களை அகற்றப் பயன்படுகிறது. இருப்பினும் சில பயிற்சி பெற்ற மருத்துவர்கள், இது அழித்துவிடும் சில செல்களில் பின்னர் பாக்டீரியா வளரக்கூடும் என்பதால் இதைப் பரிந்துரைப்பதில்லை.

5. நீரூற்றிக் கழுவும் மருந்தேற்றுக் குழல் : இது சிறு செருகு வடிகுழாயுடன் அமைந்த முனையைக் கொண்டுள்ளது. இது கிருமி நீக்கம் செய்யப்பட்ட நீர், உப்புக் கரைசல் அல்லது நீர்த்த அயோடின் கரைசல் ஆகியவற்றைக் கொண்டு காயங்களைச் சுத்தப்படுத்த உதவுகிறது. இதில் பயன்படுத்தப்படும் பொங்கி வழியும் திரவமானது மாசுக்களையும் அன்னியப் பொருள்களையும் கழுவி வெளியேற்றுகிறது. இதனால் infection பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது.

6. டார்ச் (தெரிப்பு ஒளி விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது) அல்லது குறைந்தபட்சம் பேனா விளக்கு.

7. உடனடி வினை புரியும் வேதியியல் குளிர்ப்பொருள் (ரத்தக் கசிவுகளுக்கு தேவைப்படும்)

8. ஆல்கஹால் துடைப்பான் (கைச் சுத்திகரிப்பான் என்பர்) அல்லது நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்து கைத் துடைப்பான்கள்

9. வெப்பநிலைமானி (Thermometer)

10. பாதுகாப்புப் போர்வை (லேசான மெல்லிய ப்ளாஸ்டிக் தகட்டுப் போர்வை. இது ‘அவசர உதவிப் போர்வை’ என்றும் அழைக்கப்படுகிறது)

முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய மருந்துகள்:-

தனிப்பட்ட அல்லது குடும்பத்திற்கான முதலுதவிக் கருவித் தொகுப்பில் பொதுவாக சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. பயன்பாட்டின் வகையின் அடிப்படையில் முதலுதவி கருவித் தொகுப்பில் பின்வரும் சில முக்கியமான மருந்து வகைகள் இருக்கும். அவைகள் வருமாறு

உயிர்காக்கும் மருந்துகள்:-

1. ஆஸ்பிரின் மாத்திரை நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பிற்கு எதிரான தற்காலிக தீர்வு உள்ள மாத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது முதல் உதவிப் பெட்டியில் இருப்பது அவசியம்.

2. எப்பிநெப்பிரின் இயக்குநீர் சுயமாகச் செலுத்திக்கொள்ளும் ஊசி (Epipen என்பது வர்த்தகப் பெயர்) - பெரும்பாலும் கோடைகால முகாம் போன்ற சமயங்களில் அரிதாகப் பயன்படுவதற்காக முதலுதவி கருவிப் பெட்டிகளில் வைத்துக் கொள்ளப்படுகிறது. இது காப்புப்பிறழ்வு அதிர்ச்சிகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.

வலி நிவாரணிகள்

1. பாரசிட்டமால் (அசிட்டமினோஃபென் என்றும் அழைக்கப்படுகிறது) இது மிகவும் பொதுவான வலிநிவாரணி மருந்துகளுள் ஒன்றாகும். இது மாத்திரையாகவோ அல்லது திரவ மருந்தாகவோ கிடைக்கிறது.

2. ஐப்யூப்ரோஃபன், நேப்ரோக்ஸன் போன்ற அழற்சி நீக்க வலி நிவாரணிகள் அல்லது பிற NSAIDகள் சுளுக்கு மற்றும் திரிபு போன்றவற்றைத் தீர்க்கும் மருந்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படலாம்.

3. கோடீன் என்பது வலி நிவாரணியும் பேதி நிவாரணியுமாகும்.
நோய் அறிகுறி நிவாரணம்

லோபரமைடு போன்ற வயிற்றுப் போக்கிற்கு எதிர்ப்பு மருத்துவம் - வயிற்றுப்போக்கால் நீர்வற்றல் ஏற்பட்டு குழந்தைகளை சிறுகச் சிறுக கொல்லும். நெடுந்தூரப் பயணத்தின் போதும் சிலருக்கு பேதி ஏற்படலாம். இதற்கு மேற்கண்ட மருந்தை கைவசம் வைத்து இருப்பது நல்லது.

வாய்வழி உடல் நீரேற்ற உப்புகள்.
டிபென்ஹைட்ரமைன் போன்ற ஹிசுட்டமின் எதிர்ப்பி விஷமுறிவுச் சிகிச்சைகள்:-

1. கிளர்வுற்ற கரி போன்ற உட்கவர்தல்

2. வாந்தியை ஏற்படுத்துவதற்கு இப்பகாக் சிரப் போன்ற வாந்தி ஊக்கிகளைப் பயன்படுத்துதல், இருப்பினும் இப்போது முதலுதவிக் கையேடுகள் வாந்தி ஏற்படுத்துவதற்கு எதிராக அறிவுறுத்துகின்றது.

3. மென்மை உப்புகள் (அம்மோனியம் கார்பனேட்)
தற்போதைய மருத்துவங்கள்

பென்சல்கோனியம் குளோரைடு, நியோமைசின், பாலிமைசின் பி சல்பேட் அல்லது பாசிட்ரசின் துத்தநாகம் உள்ளிட்டவை நோய்க் கிருமிகளை அழிக்கும் தைலம், நீர்மம், ஈரமான துடைப்பான் அல்லது தெளிப்பு ஆகும்.

பொவிடன் அயோடின் என்பது திரவம், துடைக்கும் குச்சி அல்லது சிறு துண்டு வடிவில் இருக்கும் நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்தாகும்.
சோற்றுக்கற்றாழை ஜெல் - தீப்புண், வேனிற் கட்டி, அரிப்பு மற்றும் தோல் வறட்சி உள்ளிட்ட பெரும்பாலான தோல் வியாதிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது; 

இது மூன்றடுக்கு ஜெல்லிற்கு மாற்றாக புண்களை ஈரப்பதத்தில் வைக்கவும் கட்டும் துணிகள் ஒட்டிக்கொள்வதிலிருந்து தடுக்கவும் பயன்படுகின்றது.
தீப்புண் ஜெல் - குளுமை உண்டாக்கியாக லிடோகைன் போன்ற மருந்துகள் பயன்படுகிறது.

அரிப்பு எதிர்ப்புக் களிம்பு

1. ஹைட்ரோகோர்டிசன் குழைவு
2. டிபென்ஹைட்ரமைன் கொண்ட ஹிசுட்டமின் எதிர்ப்பு குழைவு
3. காலமைன் குழம்பு
மேற்கண்ட இவை மூன்றும் அரிப்பை கட்டுப்படுத்தும் மருந்துகள்.
பூஞ்சை எதிர்ப்புக் களிம்பு

பென்சாயின் டிஞ்சர் - பெரும்பாலும் தனித்தனியாக உறையிடப்பட்ட துடைக்கும் குச்சி வடிவில் தோலைப் பாதுகாக்கவும் ஒட்டக்கூடிய பட்டாம்பூச்சி பட்டைகள் அல்லது ஒட்டும் தன்மையுள்ள கட்டும் துணிகளுக்கு உதவவும் பயன்படுகின்றது.

மேற்கண்டவை தவிர வீட்டில் இருக்க வேண்டிய முதலுதவி அம்சங்கள்:-

1. நல்ல வசதிகளை உடைய முதலுதவிப் பெட்டி அனைவர் வீட்டிலும் அவசியம் இருக்க (மருந்துப் பொருள்களுடன் இருத்தல்) வேண்டும்.

2. தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்கள் போன்ற பொதுவான காயங்களுக்கு சிகிச்சை அளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

3. சுளுக்கு ஏற்படும் இடங்களில் நேரடியாக ஐஸ் கட்டி வைக்கக் கூடாது. அதை, ஒரு பாலிதின் பையில் வைத்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வைக்கும் பொழுது பயனுள்ளதாக இருக்கும்.

4. சிறு தீக்காயங்களுக்கு மட்டுமே கிரீம் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும்.

5. வீட்டில் எப்பொழுதும், எந்ரேமும் மருத்துவர்களின் போன் நம்பரும், முகவரியும் அவசரத்திற்கு அனைவரும் பார்க்கும்படி ஒட்டி வைத்திருக்க வேண்டும்.

இவையே வீட்டில் இருக்க வேண்டிய முதலுதவி அம்சங்கள்.

மேலும் சில அடிப்படை முதலுதவிக் குறிப்புகள் : -

1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும். அந்த மருந்துகள் சுத்தமானதாக இருத்தல் வேண்டும். காலங்கள் கடந்து போன (Expired) மருந்துகளை பயன்படுத்தக் கூடாது.

2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.

6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒரு சாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.

7. முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்ய வேண்டும்.

8. அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனத் தைரியத்தை அளிக்க வேண்டும்.

9. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக் கூடாது.

10. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக