>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 11 ஜூலை, 2019

    கொல்லிமலை

    Image result for கொல்லிமலை

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைத்தொடராகும். இம்மலை நாமக்கலில் இருந்து ஏறத்தாழ 55 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து ஏறத்தாழ 62 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    சிறப்புகள் :

    இயற்கையை கொன்றொழித்த இடங்களுக்கு மத்தியில் இயற்கையின் பொக்கிஷ மலைப்பிரதேசமாய் இன்று நம்மிடையே உள்ளது கொல்லிமலை.

    இயற்கை சூழலில் நெடுந்தூரம் நடப்பதில் ஆர்வமுள்ளோர், மலையேற்றத்தில் ஆர்வமுள்ளோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் கொல்லிமலை வருடம் முழுவதும் நிரம்பி வழிகிறது.

    இங்கு காணப்படும் ஆகாய கங்கை என்ற அருவி மிகவும் புகழ்பெற்றது. ஆகாய கங்கை அருவிக்கு படிக்கட்டுகளில் செல்லும் போதே இயற்கை அன்னை தந்த அற்புதமான அழகை ரசித்துக் கொண்டு செல்ல முடியும்.

    ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சிறிது தூரம் இருக்கும் போதே அருவியின் இரைச்சல் சத்தம் நம்மை உற்சாகப்படுத்தும்.

    கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த 'ஓரி திருவிழா" நிறைய மக்களை இப்பகுதிக்கு வரவழைக்கிறது.

    மாசிலா அருவியும், சுவாமி பிரவானந்தா ஆசிரமமும் மற்றும் அறப்பலீசுவரர் கோவிலும் சுற்றலா பயணிகளை கவரும் இடங்களாக உள்ளன.

    பலவகையான மூலிகைச் செடிகள், பலாமரங்கள், தானிய வகைகள் என பல வகையான தாவரங்கள் இம்மலையில் நிறைந்துள்ளது.

    பழந்தமிழ் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முந்தைய காலத்தில் இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்டு வந்தார்.

    இந்த மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் உள்ளன. இதனால் கொல்லிமலையை மூலிகை மலை எனவும் அழைப்பார்கள்.

    மேலும், இங்குள்ள ஏரியில் படகு மூலம் பயணம் செய்து அங்குள்ள அழகை ரசிக்க முடியும். குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் சென்று வர சிறந்த இடம்.

    எப்படி செல்வது?

    கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

    விமானம் வழியாக :

    திருச்சி விமான நிலையம்.

    சேலம் விமான நிலையம்.

    ரயில் வழியாக :

    நாமக்கல் ரயில் நிலையம்.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    நாமக்கலில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதிகள் உள்ளன.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

    ஆகாய கங்கை அருவி.
    அறப்பளீஸ்வரர் கோயில்.
    வாசலூர்பட்டி படகுத் துறை.
    மாசிலா அருவி.
    தோட்டக்கலை தோட்டம்.
    மூலிகைத் தோட்டம்.
    படகு இல்லம்.
    பெரியசாமி கோவில்.
    எட்டுக்கை அம்மன் கோவில்.
    அன்னாசி பழத்தோட்டங்கள்.
    வியூ பாயிண்ட் மற்றும் தொலைநோக்கி இல்லம்.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    நாமக்கல் மலைக்கோட்டை.
    திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில்.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக