>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 31 ஜூலை, 2019

    எலியும், பூனையும்


    Image result for எலியும், பூனையும்..!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com




    ரோமாபுரி நாட்டை அதியமான் என்ற இளவரசர் ஆண்டு வந்தார். அவர் ஓர் மிகச் சிறந்த போர் வீரர் ஆவார். அவருடைய வாள்வீச்சு போருக்கு அந்த நாட்டில் வேறுயாறும் ஈடு இணையாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் வாள்வீசி போர் புரிவதில் வல்லவர் ஆவார்.

    அவர் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது எலி ஒன்று குறுக்கே ஓடியது. அதைப் பார்த்த இளவரசர் உடனே அதன் மீது வாளை வீசினார். ஆனால், அந்த எலி தப்பித்துச் சென்றது.

    ஆனால், இளவரசரோ விடாமல், அதனைத் துரத்தி வாளை வீசினார், மீண்டும் அந்த எலி தப்பித்து அதன் வளைக்குள் புகுந்து கொண்டது. ஒரு எலியின் மேல் வாள்வீசி நம்மால் ஜெயிக்க முடியவில்லையே என்று நினைத்து இளவரசர் மிகவும் வருத்தம் கொண்டார்.

    அப்போது அங்கு வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று இளவரசரிடம் கேட்டார். இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாத போது, ஒரு சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லை, என நடந்ததை இளவரசர் விவரித்து கூறினார்.

    அதற்கு அரசர் சிரித்துக் கொண்டே, எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! அது எலியை பிடித்து விடும் என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது.

    ஆனால், அந்த எலி எளிதாக பூனையிடம் இருந்து தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அச்சமயம் அமைச்சர் அங்கு வந்து, என்ன அரசே? நீங்களும், இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

    அதற்கு அரசர் நடந்ததைப் பற்றி விரிவாக அமைச்சரிடம் கூறினார். உடனே அமைச்சர், நம் நாட்டு பூனைகள் எதற்கும் உபயோகம் ஆகாது போல, அயல் நாடுகளில் உள்ள பூனைகள், புலி உயரம் உள்ளன. அதனால் பூனைகளை அங்கிருந்து வரவழைப்போம் என்றார். அதேபோல் அயல்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

    ஆனால் அந்த எலி அந்தப் பூனைகளிடமிருந்தும் சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்து கொண்டது. எலிக்கு இவ்வளவு திறமையா? என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் மற்ற நாட்டு பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றார்.

    ஆனால், அரசருக்கு அக்காவலன் கூறியதில் நம்பிக்கை ஏற்படவில்லை. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்று கேட்டார். சிறிது நேரம் கழித்து இளவரசர் அக்காவலனிடம், அவருடைய பூனையை எடுத்து வருமாறு கூறினார்.

    காவலாளியும் வீட்டிற்குச் சென்று பூனையைக் கொண்டு வந்தார். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் 'லபக்" என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

    என்ன இது அதிசயம்! அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.

    அதற்குக் காவலாளி, பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே. என் பூனைக்கு இப்போது ரொம்பப் பசியாக இருக்கிறது, அவ்வளவுதான் என்றார். அதைக்கேட்ட அரசரும், இளவரரும் எதுவும் கூறாமல் வாயடைத்து நின்றனர்.

    அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்றால் என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை. எனவே, அவற்றால் எலியை எப்படி பிடிக்க முடியும்?

    நீதி :

    எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், நாம் செய்கின்ற வேலையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். மேலும், அதனுடைய தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை சரியாக செய்து முடிக்க முடியும்.


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக