Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 31 ஜூலை, 2019

ஆச்சர்யப்படுத்தும் கோவில்... பிரசாதமாக வழங்கப்படும் தங்கம்

  Image result for ஆச்சர்யப்படுத்தும் கோவில்... பிரசாதமாக வழங்கப்படும் தங்கம்

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 நாம் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், பொங்கல் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவார்கள்.

 ஆனால், இங்கு ஒரு கோவிலில் பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இது கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
மத்தியப்பிரதேச மாநிலத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயர்கொண்ட இந்த ஊர் தங்கத்திற்கு பெயர்பெற்றது.

 இங்குள்ள மகாலஷ்மி கோவிலில் தங்கம் பரிசாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

 பக்திக்காக மட்டுமல்லாது, எளியோர்களின் வறுமையினை நீக்குவதற்கு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வருவோர் தாங்கள் செலுத்தும் காணிக்கையினை பணமாக செலுத்துவதில்லை.

 காணிக்கை செலுத்துபவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளிகளாக காணிக்கையினை செலுத்துகின்றனர்.

 வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போன்று குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

மற்ற கோவில்களில் சேரும் காணிக்கையை அந்தந்த கோவில்களின் திருப்பணிகளுக்காக செலவு செய்வார்கள்.

 ஆனால், இக்கோவிலில் சேர்ந்த காணிக்கையான தங்கம் மற்றும் வெள்ளியினை தீபாவளி நாளன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதுபோல் ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இந்த தங்க பிரசாதம் தினந்தோறும் வழங்கப்படுவதில்லை.

 இங்கு பிரசாதமாக தரப்படும் தங்கத்தை மக்கள் இறைவனின் அருளாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த தங்க பிரசாதத்தை யாரும் விற்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக