Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஜூலை, 2019

இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்து விடும்!


Image result for இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



 நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்களும் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவிலை பற்றி பார்ப்போம்....!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோவில்தான் 'ஹரிஷ்சந்திரகட் கோவில்".

இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இது 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டதாகும்.

இந்த கோவிலுக்கு அருகில் தான் 'கேதாரேஸ்வர்" என்ற இந்த அதிசய குகைக் கோவில் உள்ளது.

இந்த குகைக்கு உள்ளே சென்றால் நீரால் சூழப்பட்ட 5 அடி உயர சிவலிங்கத்தைக் காணலாம். அதுமட்டுமல்லாது லிங்கத்தை சுற்றியுள்ள தண்ணீரைக் கடந்துதான் லிங்கத்தை அடைய வேண்டும்.

சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் காரணத்தினால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினம்.

மழைக் காலங்களில் குகைக்கு அருகில் கூட செல்ல முடியாது. சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் இருந்துள்ளன.


இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே சேதமடைந்து விழுந்த நிலையில் ஒரே ஒரு தூண் மட்டுமே உள்ளது.

இந்த தூண் எப்போது சேதமடைந்து கீழே விழுகிறதோ அன்று உலகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

சிவலிங்கத்தை சுற்றியுள்ள நான்கு தூண்கள் 'சத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்" ஆகிய நான்கு யுகங்களை தெளிவுப்படுத்துவதாக கூறப்படுகின்றது.

ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும்.

அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில், கலியுகத்தின் இந்த நான்காவது தூணும் இடிந்து விழுந்தால் உலகமே அழிந்துவிடும் என நம்பப்படுகிறது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக