>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 3 ஜூலை, 2019

    மலைகளின் ராணி : ஊட்டி

    Image result for மலைகளின் ராணி : ஊட்டி


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங்கம் வைத்த பெயர் உதகமண்டலம். உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி என்றானது.

    இந்த அழகிய மலைப்பிரதேசத்திற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

    ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள 'டீடரந அழரவெயin" எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது. கோயம்புத்தூரிலிருந்து ஏறத்தாழ 86கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    சிறப்புகள் :

    கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது.

    இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவை ரசிப்பதற்காக பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    குளுமை மிகுந்த இடங்களில் இது மிகவும் முக்கியமானது. ஏரிகள், அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளிகள், வித்தியாசமான தாவரங்கள், குளிர், தூய்மையான காற்று என்று மக்களை கவர்ந்து இழுக்கும் சிறப்பம்சங்கள் ஊட்டியில் நிறைந்துள்ளது. இதன் சிறப்பு பெயர் மலைகளின் ராணி என்றால் அது மிகையாகாது.

    அமைதியான படகுச் சவாரி மூலம் ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் ஒரு இடமாக ஊட்டி அமைந்துள்ளது.

    கோடைக்காலமான மே மாதத்தில் படகுப் போட்டிகள் இங்கு 2 நாட்கள் நடத்தப்படுகின்றன.

    இங்கு அமைந்துள்ள ரோஜா பூங்கா அனைவரையும் கவரும் ஒரு இடம். ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்தால் ஊட்டியின் அழகை கண்டு ரசிக்கலாம்.

    எப்படி செல்வது?

    ஊட்டிக்கு சென்னை, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    விமானம் வழியாக :

    கோயம்புத்தூர் விமான நிலையம்.

    ரயில் நிலையம் :

    ஊட்டி ரயில் நிலையம்.

    எப்போது செல்வது?

    வருடத்தின் அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    ஊட்டியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

    ஊட்டி தாவரவியல் பூங்கா.
    ரயில் பொம்மை.
    ரோஸ் கார்டன்.
    நூல் தோட்டம்.
    ஊட்டி ஏரி.
    தொட்டபெட்டா மலைச் சிகரம்.
    டால்பின்ஸ் நோஸ்.
    கல்ஹத்தி நீர்வீழ்ச்சி.
    எமரால்ட் ஏரி.
    புலிமலை.
    காமராஜ் சாகர் ஏரி.
    கோத்தகிரி.
    அண்ணாமலை கோவில்.
    துரூக் கோட்டை.
    லெம்ப் பாறை.
    கேத்ரின் நீர்வீழ்ச்சி.
    பொட்டானிக்கல் கார்டன்.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    பிளாக் தண்டர்.
    அவலாஞ்சி.
    கிளன்மார்கன்.
    பைக்காரா நீர்வீழ்ச்சி.

    கோடைகால விடுமுறை என்றாலே நம் நினைவுக்கு வருவது குளுமையான இடங்கள்தான். அதுவும் நம் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி என்றால் இன்னும் நம் மனதிற்கு மகிழ்ச்சிதான். அத்தனை குளுமை நிறைந்த ஊட்டியில் நாம் பார்க்க வேண்டிய அழகான இடங்களை பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

    ஊட்டி ஏரி :

    ஊட்டிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஊட்டி ஏரி. மழை காலத்தில் மலையிலிருந்து கீழே பாயும் நீரைச் சேகரிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    அமைதியான படகுச் சவாரி மூலம், ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின்போது படகு போட்டி நடக்கும்.

    பொட்டானிக்கல் கார்டன் :

    பொட்டானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும்.

    இங்கு ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் லட்சக்கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன.

    மலர் கண்காட்சி :

    மலர்களை பார்க்கும்போதே கண்ணைக்கவரும் வகையில் அழகாக இருக்கும். ஊட்டியில் மலர் கண்காட்சி, வருடா வருடம் மே மாதம் பொட்டானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதைக் காண வருகின்றனர்.

    தொட்டபெட்டா :

    தொட்டபெட்டா மலைச்சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலைச்சிகரம். இந்த மலை ஊட்டி நகரில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம். சுற்றுலா வருபவர்களின் பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க, வனத்துறை அதிகாரிகள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம், சுற்றுலாப் பயணிகள் கண்ணுக்கினிய பள்ளத்தாக்கைக் காண முடியும்.

    வென்லாக் டவுன்ஸ் :

    வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி தரும்.

    பைக்காரா ஏரி :

    பைக்காரா ஏரி, இயற்கையின் அளவில்லா அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஏரி காண்பதற்கு ஒரு அற்புதமான அழகாக பச்சை தண்ணீருடன் காட்சியளிக்கிறது.

    வென்லாக் டவுன்ஸ் என்ற ஒரு பரந்த பசுமையான புல்வெளி, இந்த ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏரியில் ஒரு படகு இல்லத்தைப் பராமரிக்கிறது. உள்ளே ஒரு உணவகம் கொண்ட இந்த படகு இல்லம், பார்வையாளர்கள் ஏரியைச் சுற்றி பயணம் செய்ய உதவுகிறது.

    முக்கூர்த்தி :

    முக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது.

    க்ளென்மார்கன் :

    ஊட்டிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த கிராமத்தில் சிறப்பு தேயிலை தோட்டங்கள் உள்ளன.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக