>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 3 ஜூலை, 2019

    ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில் - குகையினுள் அதிசய பெட்டகம்




    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


     சுற்றிலும் மலை அரணாக விளங்க பச்சைபசேலென அமைதியான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரரை, தரையிலிருந்து சுமார் பதினைந்து அடி இறங்கிச் சென்றால் தரிசனம் செய்யலாம்.

    ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் சிவன் கோவில் ஆஸ்திரேலியாவில் ரம்மியமாக அமைந்துள்ளது. இந்த சிவன் கோவில் சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் மின்டோ என்னும் இடத்தில் உள்ளது. பூமிக்கு அடியில் 1450 சதுர அடி பரப்பில் குகை வடிவில் அமைக்கப்பட்ட கோவில் இது.

    1997ல் இக்கோவில் கட்டும் பணி ஆரம்பித்து 1999ல் மஹாசிவராத்திரி அன்று ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின.
     
    கருவறைக்கு இருபுறமும் மாதா மந்திர், ராம் பரிவார் மந்திர் மற்றும் பக்கச் சுவர்களில் கணேஷ் மந்திர், ஆஞ்சநேய மந்திர் உள்ளனர். இவை பளிங்கு கல்லினால் ஆனவை.
    உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை இக்குகை கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    'முக்தி குப்தேஸ்வரர் கோவில்" என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் சிலை உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையின் பின்புறத்தில் நிமிடத்திற்கு ஒரு நிறம் என்ற வகையில் மிளிரும் வண்ண விளக்குகள் காண்போரை பக்தி பரவசத்துக்குள்ளாக்குகிறது.

    இந்த குகை கோவிலினுள் 1,128 சிற்றாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உலகெங்கும் உள்ள இரண்டு மில்லியன் சிவபக்தர்கள் சேர்ந்து எழுதிய ஓம் நமசிவாய என்ற மந்திரம் அடங்கிய ஒரு பெட்டி 10 மீட்டர் ஆழத்தில் வைத்து அதன் மீது இம்மூலவர் சன்னிதியை அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

    உலகின் பல புண்ணிய நதிகளின் நீர், ஐம்பெரும் கடல் நீர்,  எட்டுவித உலோகங்களும் இதனுடன் அடங்கி உள்ளனவாம்.


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...







    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக