>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 19 ஜூலை, 2019

    ஏலகிரி மலை

     Image result for ஏலகிரி மலை !!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    வேலூரிலிருந்து ஏறத்தாழ 93.3கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 180கி.மீ தொலைவிலும், தர்மபுரியிலிருந்து 119கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஓர் அழகிய மலைத்தொடர் தான் ஏலகிரி மலைத்தொடராகும்.

    சிறப்புகள் :

    ஏலகிரி என்பது அமைதியான நகரம், அந்நகரம் அற்புதமான விஷயங்களைக் கொண்டுள்ளது.

    அவை சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் இடம், பசுமையான பூங்காக்கள், ஏரிகள் என இன்னும் கூறிக்கொண்டே செல்லலாம். ஏலகிரியின் இயற்கை அழகு உங்களை ஆச்சர்யமூட்டும்.

    கோடைகாலத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. சாகச விளையாட்டு விளையாடுபவர்களுக்கு ஏலகிரிமலை பிரபலமானதாக விளங்குகிறது. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அருவியில் குளித்தும் மகிழலாம்.

    ஏலகிரியில் பல கோவில்களும் உள்ளன. இவை ஏலகிரியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒருசேர ஈர்க்கும் சுற்றுலாத்தலமாக அமைகிறது. புங்கனூர் ஏரி ஏலகிரியின் குறிப்பிடத்தக்க இடங்களுள் ஒன்று.

    இங்கு படகு சவாரி செய்வது மலைகளால் சூழப்பட்ட இந்த இடத்தின் இயற்கை அழகை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. மலையின் மீது பசுமை நிறைந்த விரிந்து கிடக்கும் சமவெளிகள் கண்ணை கவருகின்றன.

    பயணிகள் தொலைநோக்கியை உபயோகித்து பரந்திருக்கும் கிராமிய அழகைக் கண்டு ரசிக்கலாம். நிலாவூர் அருவி படகு சவாரி செய்வதற்கான மற்றொரு இடமாகும்.

    இங்கு சுற்றிப் பார்ப்பதற்கான இடங்களுள் வேலவன் கோவில் முதலான கோவில்களும், சுவாமிமலை குன்று முதலான மலை வாசஸ்தலங்களும், மலையேறும் பாதைகளும் அடங்கும்.

    ஏலகிரி மலை, ஊட்டி, கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிடினும், துணிவு விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் (Pயசய புடனைiபெ), மலையேற்றம் (வுசநமமiபெ) போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலா இடமாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இயற்கைப் பிரியர்களுக்கு இங்கே இயற்கையான பூங்காக்களும், அரசின் மூலிகை மற்றும் பழந்தோட்டங்களும் உள்ளன.

    நட்சத்திரங்களைக் கண்டு ரசிப்பதில் விருப்பமுள்ளவராக இருந்தால் வேணு பாப்பு சூரிய ஆய்வு மையத்திற்கும், தொலைநோக்கி இல்லத்திற்கும் சென்று பார்க்கலாம்.

    எப்படி செல்வது?

    வேலூரிலிருந்து ஏலகிரிக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

    விமானம் வழியாக :

    சேலம் விமான நிலையம்.

    சென்னை விமான நிலையம்.

    ரயில் வழியாக :

    ஜோலார் பேட்டை ரயில் நிலையம்.

    சேலம் ரயில் நிலையம்.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    வேலூர் மற்றும் ஏலகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

    இயற்கைப்பூங்கா.
    முருகன் ஆலயம்.
    தொலைநோக்கி இல்லம்.
    நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா.
    ஆஞ்சநேயர் ஆலயம்.
    மங்கலம் தாமரைக்குளம்.
    படகு குளம்.

    இதர சுற்றுலாத்தலங்கள் :
    ஜலகாம்பாறை அருவி.
    அரசு மூலிகைப்பண்ணை.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக