வியாழன், 8 ஆகஸ்ட், 2019

2022 முதல் மறுசுழற்சி ப்ளாஸ்டிக் மூலமாகவே கூகுள் ஃபோன்கள் தயாராகும்!

2022 முதல் மறுசுழற்சி ப்ளாஸ்டிக் மூலமாகவே கூகுள் ஃபோன்கள் தயாராகும்!

 

 

 

 

 

 

 





இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

வருகிற 2022-ம் ஆண்டு முதல் 100 சதவிகிதம்  மறுசுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் மூலப்பொருட்கள் மூலம் கூகுள் ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் தயாராகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைக் காக்கவும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இப்புதிய முயற்சியை அடுத்த ஆண்டு முதலே தொடங்க உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. மக்களை மட்டுமின்றி அரசின் நடவடிக்கைகளையும் பின்பற்றிக் கவரும் நோக்குடன் டெக் நிறுவனங்களின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வும் ஒருவித காரணம் என்றே கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்ததைவிட 2018-ம் ஆண்டும் கூகுளின் கார்பன் வெளியேற்றம் 40 சதவிகிதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாம். 2020 முதல் கூகுள் தயாரிப்புகளில் ஒன்பதில் மூன்று தயாரிப்புகள் மறு சுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் மூலமாக மட்டுமே தயாராகும் என கூகுள் சேவைப் பிரிவின் தலைவர் மீகன் தெரிவித்துள்ளார்.

மேலும் 2022-ம் ஆண்டு முதல் கூகுளின் தயாரிப்புகள் முழுவதும் 100 சதவிகிதம் மறு சுழற்சி செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் மூலமாகவே தயாரிக்கப்படும் என்றும் கூகுள் உறுதி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்