Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 14 ஆகஸ்ட், 2019

பிறந்து 28 நாட்களே ஆன குழந்தையை கணவரின் சந்தேகத்தால் கொன்ற இளம்தாய்!



 

 

 

 

 

 

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

நீலகிரியைச் சேர்ந்த சப்னாமோலுக்கு, பாலக்காட்டை சேர்ந்த முஜீப்ரகுமான் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான 4 மாதத்திலேயே, பெண்குழந்தை பிறந்ததால், முஜீப்ரகுமானுக்கு, மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது.


திருமணமான 4 மாதத்தில் பெற்ற குழந்தையை கணவரின் சந்தேகத்தால் கொன்ற தாய்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, திருமணமாகி 4 மாதத்தில் பிறந்த பெண்குழந்தையை தாய் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் மகள் சப்னாமோல் (19). இவருக்கு, கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த முஜீப்ரகுமான் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் பாலக்காட்டின் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சப்னாமோல் கர்ப்பமடைந்தார். அவருக்கு திருமணமான 4 மாதத்திலேயே, பெண்குழந்தை பிறந்தது. இதனால் முஜீப்ரகுமானுக்கு, மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. திருமணம் முடிந்து 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறக்கும் என, அக்கம்பக்கத்தினர் பேசத் தொடங்கினர். இதனால் சப்னாமோல் மனமுடைந்து காணப்பட்டார்.



இதனிடையே, சப்னாமோல் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தையை தூக்கிக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். சம்பவத்தன்று, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. பேச்சு மூச்சின்றி இருக்கிறது என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பதறிய சப்னாமோலின் பெற்றோர், குழந்தையை தூக்கிக் கொண்டு, கூடலூர் மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த தகவல், கிராம நிர்வாக அலுவலர் சுனீல் நியூகோப்-புக்கு தெரியவந்தது. அவருக்கு குழந்தை இறந்ததில் சந்தேகம் இருந்ததால், போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் தாய் சப்னாமோலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சப்னாமோல் அளித்த வாக்குமூலத்தில்: திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே குழந்தை பிறந்ததால் கணவருக்கு, என்மீது சந்தேகம் வந்தது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனை வந்தது. எனவே சண்டைக்கு காரணமாக குழந்தையை கொல்ல முடிவு செய்தேன். அதன்படி, வீட்டில் யாரும் இல்லாதபோது, போர்வையால் குழந்தையின் முகத்தில் அழுத்தி கொலை செய்தேன் என்று கூறினார்.



இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிறையிலடைத்தனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிறந்து 28 நாட்களான கைக்குழந்தையை தாய் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக