Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 14 ஆகஸ்ட், 2019

ரூ. 31 லட்சம் மின்சார கார்- ஒரே நொடியில் சாம்பலானது..!

 

 

 

 

 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார் ஒன்று, முன்புறம் சென்ற வேனின் மீதி மோதி விபத்திற்குள்ளானத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த உலகின் சிறப்புப் மிக்க மின்சார கார்
ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி டிரெட்டியாகோவ் என்பவர் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 மின்சார காரை சொந்தமாக வைத்துள்ளார். அந்த காரை ஓட்டியவாரு மாஸ்கோவின் ரிங் ரோடு பகுதிக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது முன்னே சென்ற வேன் மீது டெஸ்லா கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அலெக்ஸியின் இருகுழந்தைகளும் படுகாயமடைந்தனர். சிறுகாயங்களுடன் தப்பிய அலெக்ஸி காரிலிருந்து குழந்தைகளை இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.

அதை தொடர்ந்து அந்த கார் திடீரென தீ பிடித்துவிட்டது. தீ மள மளவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியுற்ற அலெக்ஸி அந்நாட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.



எனினும், அவர்கள் வருவதற்கு கார் முற்றிலுமாக எரிந்து போனது. செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற டெஸ்லா மாடல் 3 விபத்தில் சிக்கி தீக்கு இரையான சம்பவம் அந்த காரின் உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


உலகளவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மின்சார கார்களிலேயே அதிநவீன வசதிகளை கொண்டது டெஸ்லா மாடல் 3. அவசர காலத்தில் உடனடியாக உதவும் பாதுகாப்பு கட்டமைப்புகளை சிறப்பாக பெற்ற காராகவும் இது அறியப்படுகிறது.

இது தானாக இயங்கும் திறன் பெற்றது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. டெஸ்லா மாடல் 3 கார் ஓட்டுநரால் இயக்கப்பட்டாலும் அல்லது தானாக இயங்கினாலும், ஏதேனும் ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்துவது போல வந்தால், காரிலுள்ள செயற்கை நுண்ணறிவு திறன் உடனே காரை பாதுகாக்கும் கட்டுப்பாடுகளை இயக்கிவிடும்.


ரஷ்யாவில் நடந்த இந்த சம்பவத்தில், அந்த செயற்கை நுண்ணறிவு திறன் முறையாக இயங்காததால் விபத்து நடந்தாக கூறப்படுகிறது. விபத்தின் தீவரத்தால் காரணமாக கார் தீ பிடித்து எரிந்ததாக வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், அதிநவீன மின்சார கார்களை தயாரிப்பதில் உலகின் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது. குறிப்பிட்ட இந்த டெஸ்லா மாடல் 3 கார் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 5.6 விநாடிகளில் எட்டிப்படித்துவிடும்.


இன்னும் இந்தியாவுக்குள் டெஸ்லா நிறுவனம் கால்பதிக்கவில்லை. எனினும் விபத்திற்குள்ளான டெஸ்லா மாடல் 3 கார் இந்திய மதிப்பில் ரூ. 31.70 லட்சம் விலை பெறுகிறது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 355 கி.மீ தொலைவு வரை பயனிக்கும்.

டெஸ்லா மாடல் 3 காரின் உயர் ரக வேரியண்ட், துவக்க நிலையில் இருந்து 225 கிமீ வேகத்தை 5.1 விநாடிகளில் எட்டிப் பிடித்துவிடும். இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரை வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக