>>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • >>
  • புளி ரசம் செய்வது எப்படி?
  • >>
  • தோல் நோய்களைத் தீர்க்கும் திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 29 ஆகஸ்ட், 2019

    எதுக்காக ”போரும் அமைதியும்” புத்தகம் வச்சிருக்கீங்க? தப்பாச்சே- நீதிபதி கேள்வியால் வெடித்த சர்ச்சை!


     

     

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    வழக்கு ஒன்றின் விசாரணையில் “போரும் அமைதியும்” புத்தகம் வீட்டில் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு, நீதிபதி ஆட்சேபம் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.


    எதுக்காக ”போரும் அமைதியும்” புத்தகம் வச்சிருக்கீங்க? தப்பாச்சே- நீதிபதி கேள்விய...
    மஹர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மராட்டிய பேஷ்வா மன்னர்களோடு நடத்திய போர், வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதன் 200ஆம் ஆண்டு நினைவு பேரணி, கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பீமா-கொரேகான் கிராமத்தில் நடைபெற்றது.

    அப்போது மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சமூக செயற்பாட்டாளர் வெர்னோன் கொன்சல்வேஸும் ஒருவர். இவர் தனக்கு ஜாமீன் கோரி, மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சரங் கோட்வால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொன்சல்வேஸின் மும்பை இல்லத்தில் இருந்து சில புத்தகங்களும், சிடிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை மிகவும் ஆட்சேபகரமானவை.

    இதைக் கருத்தில் கொண்டு கொன்சல்வேஸிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீசார் தரப்பில் கோரப்பட்டது. நீதிமன்றத்தில் சமர்பிக்கப் பட்டவற்றில் லியோ டால்ஸ்டாய் எழுதிய ”போரும் அமைதியும்” என்ற புத்தகம் இடம்பெற்றிருந்தது.

    இது ரஷ்யா மீதான பிரான்சின் படையெடுப்பு, ஜார் மன்னர் ஆட்சியில் நெப்போலிய காலத்தின் தாக்கம் குறித்து விவரிக்கிறது. இதன் ஆங்கில திரைப்பட சிடி, ராஜ்ய தமன் விரோதி, மார்சிஸ்ட் கட்டுரைகள், ஜெய் பீமா காம்ரேட் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இவை அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இவற்றை ஆராய்ந்து பார்த்த நீதிபதி, எதற்காக “போரும் அமைதியும்” புத்தகத்தை வைத்திருக்கிறீர்கள்? இந்த புத்தகம் ரஷ்யாவில் நடந்த போரை பற்றிய புத்தகம்.

    இதுவொரு ஆட்சேபிக்கக் கூடிய ஆவணங்களில் ஒன்று. இதற்கு நீங்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும் கடும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக