Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஜில்... ஜில்... ஐஸ்ரிஸன்வெல்ட் குகை

Image result for ஜில்... ஜில்... ஐஸ்ரிஸன்வெல்ட் குகை

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



பண்டைய காலத்தில் நாகரீகம் வளர்ச்சியடையாதபோது மனிதன் நிலையாக தங்குவதற்காக பயன்படுத்திய இடம்தான் குகைகள்.

 இவற்றில் சில இயற்கையாகவே அமைந்திருந்தன. அவற்றுள் சில மனிதன் குடைந்து சுரங்கங்களாக பயன்படுத்தினர்.

 நாம் வாழும் உலகில் இதுபோல் பல இடங்கள் இன்றும் காணப்படுகின்றன. பாறையாலான குகைகள் மட்டுமல்லாமல் பனியாலான குகைகளும் உள்ளன.

 பனி என்றாலே உறைய வைக்கும் தன்மை கொண்டது. அதுவும் குகையே பனியால் சூழ்ந்திருந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் அல்லவா?...

 இதுபோல் பனியால் சூழ்ந்த ஒரு குகையைப் பற்றிதான் இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருக்கிறோம்.
நம் உலகில் பல குகைகள் இருந்தாலும் அவற்றுள் சில குகைகள்தான் பனிக்குகைகள்.

 அவற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுவதுதான் ஐரோப்பாவின் ஆஸ்திரியா பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 'ஐஸ் அசுரர்களின் உலகம்"  என்று பலரால் வர்ணிக்கப்படுகிற ஐஸ்ரிஸன்வெல்ட் குகை. இந்த குகைதான் உலகிலேயே மிகப்பெரிய பனிக்குகை.

 உலகின் மிகப்பெரிய குகையான இது பல மில்லியன் ஆண்டுகள் பழமையானது. ஆனால், பல நூற்றாண்டு வரை யார் கண்ணுக்கும் தென்படாத இப்பனிக்குகை இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்துள்ளது.

 ஐஸ்ரிஸன்வெல்ட் குகை இன்று வரையிலும் பல நாட்டு சுற்றுலாப் பயணிகளின் 'ஜில்" தேசமாக விளங்குகிறது.
குகை உள்ள பகுதியில் கடுமையான மழை பெய்து அங்கு வெள்ளம் ஏற்பட்டு குகைக்குள்ளும் வெள்ள நீர் பாய்ந்திருக்கலாம் எனவும், பின் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக அந்தத் தண்ணீர் பனியாகியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 இந்த குகையை அடைவது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த பனிக்குகை உள்ள இடத்தை அடைவதற்கு பல ஆயிரம் அடி உயரம் பயணம் செய்ய வேண்டும்.

 இதன் மொத்த நீளம் பல கிலோமீட்டராக கூறினாலும் அதன் உண்மையான எல்லை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 மக்கள் இதில் ஒரு கிலோமீட்டர் வரை மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

குகைகள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது போல் காட்சியளிக்கும் இந்த இடம் இரத்தம் உறையும் அளவிற்கு குளிர் மற்றும் ஆபத்து நிறைந்த இடமாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக