Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

’தள்ளுபடி வழங்குவதை நிறுத்துங்கள்’- ஜொமேட்டோ, ஸ்விகி-க்கு உணவக ஆணையம் கடிதம்!

’தள்ளுபடி வழங்குவதை நிறுத்துங்கள்’- ஜொமேட்டோ, ஸ்விகி-க்கு உணவக ஆணையம் கடிதம்!

 

 

 

 

 

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

 


அதிகப்படியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என தேசிய உணவக ஆணையம் ஜொமேட்டோ, ஸ்விகி போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அதிகப்படியான தள்ளுபடிகளை நிறுத்தக் கோரிய கடிதம் ஜொமேட்டோ, ஸ்விகி, உபேர், ஃபுட் பாண்டா ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உணவக நிர்வாகிகள் தரப்பிலிருந்து ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடி வழங்குவதால் ஏற்பட்ட பாதிப்பு, கமிஷன் பிரச்னை, அழுத்தம் எனப் பல புகார்கள் தேசிய உணவு ஆணையத்துக்கு வந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தள்ளுபடிகளும் சலுகைகளும் அவ்வப்போது அல்லது திருவிழாக் காலம் போன்ற நேரங்களில் வழங்கினால் எந்தப் பிரசனையும் இல்லை. 365 நாட்களும் 30 முதல் 70 சதவிகிதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் எனக் கூறுவதில் நியாயமில்லை” என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் நாங்கள் எதிராக செயல்படவில்லை. ஆனால், இதைப் பயன்படுத்தி தேவையற்ற மேலாதிக்கம் செலுத்தப்படுவதாலே நாங்கள் தலையிடுகிறோம்” என்கிறார் தேசிய உணவு ஆணைய தலைவர் அனுராக் கட்ரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!