Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

பரிகாரம் கூறுவதில் சகுனங்களின் பங்கு !

Image result for பரிகாரம் கூறுவதில் சகுனங்கள் பங்கு !


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஜாதகத்தில் தோஷங்கள் ஏதேனும் இருந்தால், அந்த தோஷம் நீங்குவதற்காக ஜோதிடரை வைத்து பரிகாரம் செய்வார்கள். அவ்வாறு தோஷங்கள் நீங்குவதற்காக பரிகாரங்கள் செய்து கொண்டிருக்கும்போது சகுனங்கள் தோன்றுவதை வைத்து, செய்யும் பரிகாரம் பலன் தருமா? தராதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 பரிகாரம் செய்துகொண்டிருக்கும் சமயத்தில் ஏதாவது சகுனங்கள் தோன்றுகிறதா என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சகுனங்கள் பார்த்து கூறப்படும் பரிகாரங்கள் நிச்சயமாக பலன் தரும். எனவே பரிகாரம் சம்பந்தமான சகுனங்களைக் காண்போம். பரிகாரங்களைக் செய்யும்போது :

 கோவில் மணியோ அல்லது பூஜை மணியோ ஒலிப்பதைக்கேட்க நேர்ந்தால் பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.

யாராவது கோவில் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தால் பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.

மந்திர ஒலி அல்லது பக்திப் பாடல்களைக் கேட்க நேர்ந்தால் பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.

கோவில் அர்ச்சகர் அங்கே வரக்கண்டால் பரிகாரங்கள் நிச்சயம் பலன் தரும்.

யாராவது ஒருவர் குளித்துவிட்டு வருவதைக் கண்டால் பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

எந்த தெய்வத்தின் படம் அல்லது உருவம் கண்ணில் படுகிறதோ அந்த தெய்வத்தை வணங்கி வர பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

யாராவது ஒருவர் ஒரு கோயிலைப் பற்றியோ, ஒரு தெய்வத்தைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டாலோ, ஒரு தெய்வத்தின் பெயரை உச்சரிப்பதைக் கேட்டாலோ, அந்த கோவில் அல்லது அந்த தெய்வத்தை வழிபட பரிகாரம் உண்டாகும்.

யாராவது வந்து யாசகம் கேட்டாலோ அல்லது யாசகரைக் காண நேர்ந்தாலோ, தான தர்மங்கள் செய்வதன் மூலம் பரிகாரம் உண்டாகும்.

துணி வெளுப்பவரையோ அல்லது துணிமணிகளை கஞ்சிப்போட்டு தேய்க்கும் பெண்ணையோ காண நேர்ந்தாலோ அல்லது அவன் குரலை கேட்க நேர்ந்தாலோ வஸ்திர தானம் செய்வதன் மூலம் பரிகாரம் உண்டாகும்.

யாராவது வந்து, என்ன பொருள் வேண்டும் என்று கேட்கிறார்களோ, அந்தப் பொருளை தானம் செய்ய பரிகாரம் உண்டாகும். கேட்ட பொருள் விலை உயர்ந்ததாக இருந்தால் அப்பொருள் போன்ற பிரதிமையை தானம் செய்யலாம்.

யாராவது தலைமுடியில் சிக்கு நீக்குவதைக் கண்டால் பரிகாரம் மூலம் தடைகள் நீங்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக