>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 17 செப்டம்பர், 2019

    மகர ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020..!!


    Image result for குருப்பெயர்ச்சி
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!!

    இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் பெயர்ச்சியாகி அயன, சயன போக ஸ்தானத்தில் ஆட்சி பெற இருக்கிறார்.

    இயற்கை சுபரான குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து சுக ருண ரோக மற்றும் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பயணங்கள் மூலம் எண்ணிய காரியங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனை வாங்குவதற்கான யோகம் உருவாகும். தாயின் உடல்நலம் மேன்மையடையும்.

    எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்த்த எண்ணம் நிறைவேறும். தொழிலில் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

    உத்தியோகஸ்தரர்களுக்கு :

    மாமன் வர்க்கத்தினர் தங்களது தொழிலுக்கு ஏதேனும் சிறிதளவு உதவி செய்வார்கள். சிறுதொழில் செய்பவர்களுக்கு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி மேற்கொண்டால் வேலைவாய்ப்பு உருவாகும். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

    பெண்களுக்கு :

    தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலை தேடினால் அரசு பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வங்கியில் கடனுதவி பெறுவதன் மூலம் சிறுதொழிலை சீர் செய்யலாம். மேற்கல்வி படிக்க விரும்புவோரின் எண்ணம் ஈடேறும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

    கலைஞர்களுக்கு :

    வெளியூர் சென்று நமது கலாச்சாரங்களை ஓவியமாக வரைந்து தங்களது திறமைகளை நிரூபிக்கும் காலம் இது. கலைஞர்கள் தங்களது படைப்புகளில் புதுவிதமான கண்ணோட்டத்தை பயன்படுத்தி பரிசு மற்றும் பாராட்டு பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகள் மேம்படும். கலை சார்ந்த போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

    விவசாயிகளுக்கு :

    நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மனை அல்லது விவசாய பூமி வாங்கும் யோகம் கிடைக்கும். நெல் பயிரிட்டு உள்ளவர்களுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். மண் சார்ந்த பொருட்கள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு :

    அடிப்படைக்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் படிப்பில் சிறிது கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளது. வில்வித்தை போன்ற போட்டிகளில் கலந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வியில் முதல் மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.

    வியாபாரிகளுக்கு :

    வாகனங்களை பழுது பார்க்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் இது. ரசாயனம் தொடர்பான தொழில்களில் ஈடுபடுபவர்கள் புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். வங்கிக்கடன் பெறுவதன் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ளலாம். தாய்வழி சார்ந்த சொத்துக்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும்.

    அரசியல்வாதிகளுக்கு :

    கட்சி சார்ந்த மேலதிகாரிகளின் அறிமுகம் புதுவிதமான மாற்றத்தை உருவாக்கும். உரையாடும்போது பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். பிரச்சாரத்திற்காக வெளியூர் செல்ல நேரிட்டால் உணவில் கவனம் செலுத்த வேண்டும். கருத்துக்களை வெளியிடும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

    வழிபாடு :

    திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வர எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக