Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 செப்டம்பர், 2019

சர்ப்ப தோஷம் வரக் காரணம் என்ன?

 Image result for சர்ப்ப தோஷம்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

நமக்கு இந்த பிறவியில் தோஷங்கள் அமையப்பெற்ற ஜாதகம் வரக் காரணம் நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளே ஆகும். முற்பிறவியில் பெரியோர்களை துன்புறுத்தினாலோ அல்லது இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றைக் கொல்ல முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால் (மற்றது தப்பித்துவிட்டால்) அது மிகக்கொடூரமான பாவமாகும். இப்பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர்.

பரிகாரங்கள் :

தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட்டால் தோஷம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.

பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்கினால் தோஷம் விலகி கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு உண்டாகும்.

உப்பு காணிக்கை செலுத்தினால் சர்ப்ப தோஷம் விலகி உடல் நலம் பெறும்.

மஞ்சள் காணிக்கை செலுத்தினால் சர்ப்ப தோஷத்தின் விஷத்தன்மை நீங்கும்.

நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தினால் நாக தோஷத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வு பெறலாம்.

மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைத்தால் தோஷத்தினால் எற்ப்பட்ட குறைகள் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தோஷ பரிகாரத்திற்கு மஞ்சள் பொடி காணிக்கை, பால் - பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பரிகார ஸ்தலங்கள் :

குன்றத்தூரில் சேக்கிழார் பெருமான் ஏற்படுத்திய திருத்தலம் ராகு பகவானுக்கு பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. ராகுகேது பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அகப்பட்டு தன் பலத்தை இழப்பது பெரிய தோஷம் அது. இத்தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து ராகுகால பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தால் தோஷ நிவர்த்தியடைந்து நன்மையடையலாம்.

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள தலத்தில், மாகாளன் எனும் நாகம் காளத்திநாதர் ஆணைப்படி இங்கு லிங்கம் அமைத்து பூஜித்தது. மூலவர் மகாகாளேஸ்வரர். இது, ராகு-கேது பூஜித்த தலமும் ஆகும். இங்கு வழிபட்டு வந்தால் சர்ப்ப தோஷம் நீங்கும்.

 ஆதிசேஷன் பூஜித்து அருள் பெற்ற தலம் ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு-கேதுவால் உண்டான தோஷம் விலகும். இது சென்னையில் உள்ள திருவெற்றியூரில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக