Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 அக்டோபர், 2019

ஜப்பானில் மழை - 10 பேர் பலி

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஜப்பானில் சிபா, புகுஷிமா மாகாணங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சிபா மாகாணத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை அரை நாளில் கொட்டி தீர்த்தது. 13 ஆறுகள் கரை புரண்டோடுகின்றன. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இரு மாகாணங்களிலும் வெளுத்துக்கட்டிய மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் 3 பேர் பலியாகினர். 2 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். 3 பேர் காருடன் மூழ்கி பலியாகினர். மழை தொடர்பான விபத்தில் சிக்கி 2 பேர் இறந்தனர். 4 பேரை காணவில்லை.
மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை காப்பாற்றும் பணியில் நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுமாறு பிரதமர் ஷின்ஜோ அபே உத்தரவிட்டார்.
டோக்கியோவில் பலத்த மழையால் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் பல விமான சேவைகள் ரத்தாகின. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் இரவை கழிக்கிற நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கு தேவையான போர்வைகள், உணவுகள் அனைத்தையும் விமான நிலைய நிர்வாகம் வழங்கியது.
நேற்று காலை முதல் விமான சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன


 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!