Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 நவம்பர், 2019

சின்ன சேலம்: நூதன முறையில் ஏமாற்றிய ‘வெற்றிகொடிகட்டு’ கேங்!

 




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பத்து மாதங்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறேன் என்று மக்களிடம் வசூல் செய்து கோடிக்கணக்கில் ஏமாற்றிய சின்ன சேலம் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 பணத்தை தங்களிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கித் தருகிறோம் என்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி பணத்தை இழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுபற்றிய செய்திகள் அதிகம் வெளிவந்தாலும் மக்கள் ஏமாறுவது மட்டும் நின்றபாடில்லை.

கள்ளக் குறிச்சி அருகேயுள்ள சின்ன சேலம் ஊரில் லட்சுமி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்திவந்துள்ளார் வெங்கடேசன். தனது வாடிக்கையாளர்களிடம் தான் சீட்டு பிடிப்பதாகவும், தன்னிடம் மாதம் ஆயிரம் ரூபாய் என பத்து மாதங்களுக்கு கட்டினால் பத்தாவது மாத முடிவில் 20 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். பத்து மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்பதை நம்பி மக்கள் பணம் கட்டியுள்ளனர். முதலில் வெங்கடேசன் சொன்ன மாதிரியே பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதனால் பெரியளவிலான தொகையை மக்கள் முதலீடு செய்துள்ளனர். மேலும் சின்ன சேலம் மட்டுமல்லாமல் முகவர்கள் மூலம் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வெங்கடேசனிடம் மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். மக்களை ஈர்க்கும் விதமாக ‘படையப்பா’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெற்றிக்கொடிகட்டு’ பாடலை தனது புகைப்படங்களுடன் சேர்த்து வீடியோவாக உருவாக்கி வாட்ஸப் குழுக்களில் பகிர்ந்து, வாழ்க்கையில் முன்னேற என்னிடம் முதலீடு செய்யுங்கள் என மார்கெட்டிங் செய்துள்ளார்.

டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருப்பதால் வெங்கடேசன் எங்கும் ஓடிவிடமாட்டார் என நம்பி மக்கள் மேலும் முதலீடு செய்துள்ளனர். ஆனால் சிறிய தொகையை சரியாக கொடுத்த வெங்கடேசன் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரவோடு இரவாக லாரியை வரவழைத்து தனது கடையில் உள்ள பொருள்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு தப்பியோடிவிட்டார். இவரிடம் முகவர்களாக வேலை பார்த்த அழகேசன், சுரேஷ் கண்ணா, செந்தில் குமார், செல்வம், சீனிவாசன் ஆகியோரும் தப்பியோடிவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்க விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டதன் பேரில் தப்பியோடிய வெங்கடேசனை பிடிக்க விழுப்புரம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் கள்ளகுறிச்சி அருகே வெங்கடேசனையும், சுரேஷ் கண்ணாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹுண்டாய் ஐ 20 கார், மூன்றரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. தப்பியோடிய முகவர்களையும் தேடும் பணி நடைபெறுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!