Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 26 டிசம்பர், 2019

இதில் நீங்கள் எந்த வகை?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்கலாம் வாங்க...!!
 
ஒருமுறை கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு, மனைவியை அவள் தாயார் வீட்டுக்கு விரட்டி விட்டான்.

ஆனால், கணவனால் மனைவியைப் பிரிந்து இருக்க முடியவில்லை. அவளை மீண்டும் அழைத்துவர நினைத்து மனைவிக்கு போன் செய்தான்.

கணவன் : நீ இல்லாமல் என்னால் வாழவே முடியவில்லை.. வீட்டிற்கு வா... நாம் சேர்ந்து வாழலாம்...

மனைவி : ஒரு டீ கப்பை எடுத்து தரையில் வீசுங்க...
கணவன் : வீசிட்டேன்...

மனைவி : இப்பொழுது கீழே உடைந்து கிடக்கும் அந்த உடைந்த கப்பை, உங்களால் மீண்டும் ஒட்ட வைக்க முடியுமா? அப்படித்தான் என் மனமும். ஒருமுறை உடைந்தால் மீண்டும் ஒட்டாது.

கணவன் : நான் வீசுனது பிளாஸ்டிக் கப்... அது உடையவே இல்லையே...
மனைவி : சரி... ஈவினிங் வந்து கூட்டிக்கிட்டு போங்க...
கணவன் : எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக்கூடாது...😆😆
--------------------------------------------------------------------------------------------------------
ஆனந்த் : 10வா படிக்கும்போது கிறிஸ்துமஸ் வருதுன்னு ஸ்டார் ஒட்டலாம்னு எங்க சார்கிட்ட போயி கேட்டேன்... அதுக்கு சார் என்ன சொன்னாரு தெரியுமா?

அரவிந்த் : என்ன சொன்னாரு?

ஆனந்த் : என் ஸ்டார்  நீ இருக்கும்போது இன்னொரு ஸ்டார் எதுக்குன்னு சொன்னாரு...

அரவிந்த் : இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...😂😂
ஆனந்த் : நம்பலன்னா... ரத்தம் கக்கி செத்துருவ டா...
அரவிந்த் : 😧😧
--------------------------------------------------------------------------------------------------------
எது பலமாக இருக்கும்?

மட்டம் தட்டப்படும் மனமும்,
மட்டம் தட்டப்படுகின்ற தரையும்
என்றும் பலமானதாகவே இருக்கும்.
உங்கள் வாழ்க்கையை அழகாக்க வேண்டுமா?
பேச்சை விட மௌனமே சிறந்தது.
அனைத்தையும் அமைதியாய் ரசியுங்கள்...
உங்களுடைய வாழ்க்கை
உங்களுக்கே அழகாய் தோன்றும்...
--------------------------------------------------------------------------------------------------------
இதை மட்டும் செய்து விடாதீர்கள்...!

யார் பேசினாலும் கேட்டுக்கொள்...
ஆனால் சிலரிடம் மட்டுமே பேச்சுக்கொடு...
எவர் துயரங்களையும் கேட்டுக்கொள்...
ஆனால் அறிவுரை மட்டும் கூறிவிடாதே...
--------------------------------------------------------------------------------------------------------
 
குறளும்... பொருளும்...!!

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

பொருள் :

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர். ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத்தகாத பெரும் பழியை அடைவர்.
--------------------------------------------------------------------------------------------------------
மனிதர்கள் எத்தனை வகைகள்...!!

எதையும் சிந்திக்காமல் வாழ வேண்டும் என்று சிலர்...
எதற்கு வாழ வேண்டும்? என்று சிலர்..
எப்படி வாழ வேண்டும்? என்று சிலர்...
எப்படியாவது வாழ்ந்திட வேண்டும் என்று சிலர்...
என நான்கு வகைகளாக மனிதர்கள் உள்ளனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!