>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 3 பிப்ரவரி, 2020

    கைரேகையின்படி உங்களுக்கு என்ன யோகம் உள்ளது?

    Image result for கைரேகை"


    னிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளிலும் பல அர்த்தங்கள் மறைந்துள்ளது. அதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கையமைப்பு மற்றும் ரேகைகள் அமைவதில்லை.

     அப்படி பார்க்கும்போது நமது கையமைப்பினை வைத்தே செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்களை பற்றிக் கூறலாம். அந்த வகையில் சிற்பக் கைகள் உடையவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என பார்ப்போம்......!

    சிற்பக் கைகள் :

     இந்த கை அமைப்பு உடைய கைகளின் அடிப்பாகமானது ஆரம்பத்தில் பருத்தும், மேலே செல்லச் செல்ல குவிந்து இருப்பது போன்று காணப்படும்.

     கையின் நான்கு விரல்களும் இதே மாதிரி காணப்பட்டாலும், கட்டை விரல் மட்டும் சற்று குட்டையாக காணப்படும்.

    குண நலன்கள் :

     இவர்கள் பெரிய பெரிய திட்டங்களையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவார்கள். உலகையே வெல்ல வேண்டும் என்று மனதளவில் நினைத்துக் கொள்வார்கள்.

     ஆனால் அதை செயல்படுத்துவதற்கான முயற்சி எதுவும் இருக்காது. எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.

     சிறிது நேரம் வேலை செய்தாலே போதும் களைப்படைந்து விடுவார்கள். நன்றாகத் தூங்க விரும்புவார்கள்.

     இவர்களுக்கு எதிராக யார் தவறு செய்தாலும் கூட அதை மனதில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். உடனடியாக மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.

     அறிவாளிகளாகவும், பிறரை நம்பவைக்கும் அளவிற்கு பேச்சாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

     அனைவரின் மீதும் பாசத்தை காட்டி விட்டு பின்பு கஷ்டப்படுவார்கள். மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்த்து இரக்கம் கொள்வார்கள்.

     இவர்களால் சுயமாக சிந்தித்து செயல்பட முடியாது. பிறரிடம் ஆலோசனை கேட்டுதான் அனைத்து காரியங்களையும் செயல்படுத்துவார்கள்.

    இவர்கள் நல்ல கலை ரசிகர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கவிஞர், எழுத்தாளர், ஓவியர், நடிகர்களாக இருப்பார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக