Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்


ஏரியின் விந்தையான
லோனார் ஏரியைப் பற்றி மிகவும் விசித்திரமான விசயம் ஒன்று உள்ளது. 400 அடி அகலமுள்ள முழுமையான வட்ட வடிவ ஏரி உள்ளூர் புவியியலுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் விசித்திரமான காந்த சக்தி மின் சாதனங்களில் தலையிடுவதையும் திசைகாட்டிகளை குழப்புவதையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்காந்த ஒழுங்கின்மைக்கு என்ன காரணம்?
என்ன அசாதாரணமான ரகசியங்கள் நீருக்கடியில் மறைக்கப்பட்டுள்ளன? ஏரியின் விந்தையான காந்த பண்புகள் வேற்று கிரக தோற்றத்தில் இருக்க முடியுமா? 

மகாராஷ்டிரா
லோனார் ஏரி மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள அவுரங்காபாத்தில் இருந்து நான்கு மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அழகான மற்றும் மர்மமான இடத்தைப் பற்றி பலருக்கும் தெரியாததால், இது பல சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைப்பெறவில்லை. இந்தியாவின் லோனார் ஏரி, 1823 ஆம் ஆண்டில் சி.ஜே.இ அலெக்சாண்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியால் அடையாளம் காணப்பட்டவுடன் குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கியது.
சராசரியாக 1,830 மீட்டர்
ஏரியின் நீர் இயல்பானதாக இல்லாமல் இருக்கும் நிலையில், ஏரியே முற்றிலும் தவறான இடத்தில் இருப்பதாக தோன்றுகிறது. லோனார் ஏரி எவ்வாறு இப்படி இருக்க முடியும், அதில் என்ன தவறு என்று நாசா விஞ்ஞானிகள் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு அதிகாரிகள் நீண்ட காலமாக யோசித்து வருகின்றனர். லோனார் ஏரி சுமார் 150 மீட்டர் (500 அடி) ஆழமும், சராசரியாக 1,830 மீட்டர் (6,000 அடி) விட்டமும் கொண்டது.இந்த முழு வட்டவடிவ ஏரி, அதனை சுற்றியுள்ள பகுதியை விட அதிக காந்த அளவீடுகளின் சான்றுகளைக் காட்டுகிறது.
டெர்ரா செயற்கைக்கோள்
நவம்பர் 2004 இல், நாசாவின் டெர்ரா செயற்கைக்கோள் மர்மமான ஏரியின் சிறந்த புகைப்படத்தை எடுத்தது. இந்த பகுதியில் ஏற்படும் விசித்திரமான மின்காந்தக் இடையூறுகளால் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக குழப்பமடைந்து, இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றனர்.
விண்கல்
புவியியலாளர்கள் இந்த ஏரி உண்மையில் ஒரு விண்கல் தாக்குதலால் ஏற்பட்ட பள்ளமாக இருக்கக்கூடும் என்று பரிந்துரைத்தனர். விண்வெளியில் இருந்து வரும் பொருள்கள் பொதுவாக பூமியில் தாக்கும் பொருள்களை விட அதிக மின்காந்தத்தன்மை கொண்டிருக்கும்.
பாறை துண்டுகளைக் கண்டறிந்தனர்
இந்த ஏரி மற்றும் அதன் நீரை ஆய்வு செய்யும் போது, ​​உள்ளூர் புவியியலாளர்கள் அதிக அழுத்தம், உயர் வெப்பநிலை உருமாற்றம் ஏற்படும் போது உருவாகும் தாதுக்கள் மற்றும் பாறை துண்டுகளைக் கண்டறிந்தனர். விஞ்ஞானிகள் மாஸ்கெலைனைட் போன்ற அசாதாரண தாதுக்களைக் கண்டுபிடித்தனர். இயற்கையாகவே உருவாகும் ஒரு வகையான கண்ணாடியான இது மிக அதிக வேக தாக்கங்களால் மட்டுமே உருவாகிறது.
90,000 கிமீ வேகத்தில் நகரும்
ஆகவே மணிக்கு 90,000 கிமீ வேகத்தில் நகரும் 2 மில்லியன் டன் எடைகொண்ட விண்கல் பூமியைத் தாக்கியபோது லோனார் ஏரி உருவானது என்பதற்கு போதுமான அறிவியல் சான்றுகள் உள்ளன.
எப்போது இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது நிச்சயமற்றது. ஆனால் விஞ்ஞானிகள் 35,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர். 

வானியல் அற்புதம்
இது பூமியின் மிகப்பெரிய மற்றும் ஒரே உயர்-திசைவேக தாக்க பள்ளம் ஆகும். மேலும் இந்த அழகான ஏரியை லோனார் பூமியில் அறியப்பட்ட வானியல் அற்புதம் என்று விவரிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக