Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு அருகே பெருந்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

லகம் முழுவதும் வேகமாக பரவி வரும் தொற்றுக்கு இதுவரை 1,68,000 பேர் பாதிக்கப்பட்டு, 6,610 பேர் இறந்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் இந்த தொற்றுக்கு இதுவரை மூவர் பலியாகியுள்ளனர். 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல், சளி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நடத்திய சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் ஈரோட்டில் இருக்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தனி வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.


இதற்கு முன்னதாக துபாய் வழியாக சென்னை வந்திருந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் பூவிருந்தமல்லியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்களுக்கு எந்த தொற்று பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் இன்று விடுவிக்கப்பட்டனர்.


மாநிலங்களில் கொரோனா பாதிப்பு:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 39 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் 7 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 13 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், லடாக்கில் 4 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 3 பேருக்கும், தெலுங்கானாவில் 4 பேருக்கும் இந்த தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஹரியானாவில் 14 பேருக்கு இந்த தொற்று உள்ளது. அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். பீகாரில் இதுவரை ஒருவருக்கும் இந்த தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!