>>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 3 மார்ச், 2020

    தண்ணீரில் குதித்தபோது, பாறை மோதி பரிதாபமாகப் பலி!



    த்திர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் குட்டும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா குரேஷி. வயது 18. ராஜா டிக்டாக் செயலியில் விதவிதமாக வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனது கிராமத்திற்கு அருகே உள்ள கங்கா கால்வாய்க்கு ராஜா தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். குளித்து முடித்த பின் ஒரு டிக்டாக் வீடியோ எடுக்கவேண்டும் என எண்ணிய அவர் மிகவும் ஆபத்தான முடிவு ஒன்றை எடுத்தார்.

    அதன்படி, நண்பர்களை டிக்டாக்கில் வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு கால்வாயின் மதகுகளிருந்த இடத்திற்குச் சென்ற அவர் அங்கிருந்தவாறு தண்ணீர் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்த பகுதிக்குள் குதித்தார்.

    எதிர்பாராத விதமாக கால்வாயில் பாறைகள் அதிகம் இருந்த பகுதியில் ராஜா குதித்ததால் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராஜா குரேஷி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் ராஜாவின் நண்பர்கள் எடுத்துக்கொண்டிருந்த டிக்டாக் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதையடுத்து போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.


    விசாரணையின் போது இந்த சம்பவம் குறித்து எந்தவித புகாரும் கொடுக்காமல் ராஜாவின் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்துள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். டிக்டாக் மோகத்தால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்தபோதும், சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்காமல் உறவினர்கள் அவர் உடலைப் புதைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக