Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 மார்ச், 2020

நீங்கள் இப்படி இருந்தால்... என்ன நடக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
நீதிபதி : சாமி தலையிலிருந்து கிரீடத்தை திருடினாயா?
திருடன் : ஆமா எஜமான்.. சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.
நீதிபதி : 😠😠
---------------------------------------------------------------------
மருத்துவர் : பல் வலியால.. உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க.. நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?
கணவன் : மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டு இருந்தேன்.
மருத்துவர் : 😂😂
---------------------------------------------------------------------
தத்துவம் மச்சி... தத்துவம்...!!
டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டிதான் சம்பாதிக்கிறாங்க...
அதனால அவங்கள வெட்டி வேலை செய்யுறாங்கன்னு சொல்ல முடியுமா?
---------------------------------------------------------------------
பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்...
பால் போடுறவன் பால்காரன்...
தபால் போடுறவன் தபால்காரன்...
அப்போ பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?...
---------------------------------------------------------------------இப்படி இருந்தால்?
அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே...
உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்...

அதிகம் அன்போடு நடந்துகொள்ளாதே...
உன்னை அடிமையாக்கி விடுவார்கள்...

அதிகம் பொறுமையுடன் நடக்காதே...
பைத்தியம் ஆகும்வரை விடமாட்டார்கள்...

வெளிப்படையாக இருந்துவிடாதே...
பலர் உன்னை வெறுக்க நேரிடும்...

எல்லோரையும் நம்பிவிடாதே...
ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்..

கோபப்படாமல் இருந்துவிடாதே...
கோமாளியாக்கி விடுவார்கள்...!
சிறந்த வரிகள்...!!
போராடி தோற்றுப்பார்...
எதிரியும் உன்னை நேசிப்பான்...
---------------------------------------------------------------------
தோல்விக்கும், வெற்றிக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்....
அதை பிடிக்க உனக்கு தேவை சுயநம்பிக்கை...

எவ்வளவு வேகமாக விழுகிறாயோ
அதை விட வேகமாய் எழு...
---------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

விளக்கம் :

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக