>>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 26 மார்ச், 2020

    சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டரங்கம்!!

    அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளை இன்று கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

    மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுநாள்வரை 650-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்கா, சீனா, ஈரான், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் கொரோனாவால் ஏற்பட்டுவரும் ஆயிரக்கணக்கான உயிரிழப்பை கருத்தில் கொண்டு, இந்த வைரசின் கோரத்தாண்டவத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    இநத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உச்சபட்சமாக, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வரும்முன் காக்கும் இதுபோன்ற நடவடிக்கை ஒருபுறமிருக்க, கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒருவேளை அதிகமானால், அந்த சூழலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நோக்கில் அனைத்து மாநிலங்களும் கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மையங்களை ஏற்படுத்தி வருகின்றன.

    தமிழகத்தில் 10, 518 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் தயாராக உள்ளன. இநத வரிசையில் அஸ்ஸாம் மாநிலமும் கொரோனா எதிர்கொள்ள தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது.

    இதற்கு சிறந்த உதாரணமாக, குவஹாத்தி நகரில் உள்ள பிரபலமான இந்திரா காந்தி சர்வதேச விளையாட்டரங்கில், கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்கும் பணியை அஸ்ஸாம் மாநில அரசு முழுவீச்சில் ஆரம்பித்துள்ளது.

    மாநில அமைச்சர் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மாவின் மேற்பார்வையில் பிரம்மாண்டமான இந்த மையத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக