Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

500 கிலோ அரிசி வீணாகக் கீழே கொட்டப்பட்டதால்....மக்கள் அதிர்ச்சி

கொரொனாவை தடுக்க இந்தியா முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதே உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில்களும் முடக்கப்பட்டுள்ளதால், ஏழை , எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் சுமார் 500 கிலோ அரிசி வீணாக கீழே கொட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள முட்புதிரில் அரிசி வீணாகக் கொட்டப்படுள்ளதால், அதில் பூச்சி, ஈ மொய்த்துவருகிறது, ஆனால் மக்கள் அடுத்த வேளைக்கு உணவு இல்லாமல் அதை எடுத்துச் செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக