Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஏப்ரல், 2020

5-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

ஜோதிட சாஸ்திரத்தில், 'பூமிக்காரகன்" என்று அழைக்கப்படும் செவ்வாய், இளமைத்துடிப்புள்ள கிரகம். செவ்வாய் சிவந்த நிறம் கொண்டவர் என்பதால், சிவப்பு நிறத்திற்கு இவரே அதிபதி ஆகிறார்.

பூமிக்காரகன் என்பதால் மண்ணில் செய்யக்கூடிய விஷயங்கள், மண்ணால் செய்யக்கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகள், ரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்கள், ஆயுதம் சம்பந்தப்பட்டவை, ராணுவம், பவளம், துவரம் பருப்பு, ராணுவத் தலைமை ஆகியவற்றுக்கு அதிபதி ஆகிறார்.

இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு.

லக்னத்திற்கு 5-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.

5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

👉 குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் இல்லாதவர்கள்.

👉 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

👉 வசதி வாய்ப்புகள் குறையும்.

👉 விளையாட்டு துறைகளில் ஆர்வம் இருக்கும்.

👉 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.

👉 புத்திர பாக்கியம் தாமதப்படும்.

👉 விடாமுயற்சி உடையவர்கள்.

👉 பழிவாங்கும் குணம் உடையவர்கள்.

👉 தற்காப்பு கலைகளில் விருப்பம் கொண்டவர்கள்.

👉 முரட்டுத்தனமான சுபாவம் உடையவர்கள்.

👉 முன்கோபத்தால் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விட்டு பின் அதைப் பற்றி சிந்திக்கக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக