Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

சிங்கங்களையும் விட்டு வைக்காத கொரோனா? – அதிர்ச்சியில் அமெரிக்கா!

அமெரிக்க பூங்காவில் புலிகளை தொடர்ந்து சிங்கங்களுக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனிதர்களை லட்சக்கணக்கில் பலி கொண்டுள்ள நிலையில் தற்போது மிருகங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முதன்முதலாக நியூயார்க்கில் உள்ள ப்ரோன்ஸ் விலங்குகள் பூங்காவில் உள்ள புலிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதே பூங்காவில் இரு சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தமாக அந்த பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுதவிர அமெரிக்காவில் பூனைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!