Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now
Click here to join our WhatsApp channel
செவ்வாய், 21 ஏப்ரல், 2020
உலக வர்த்தக மையக் கொள்கைகளை மீறுகிறது இந்தியா: சீனா குற்றச்சாட்டு
ஊர்க்கோடாங்கி
செவ்வாய், ஏப்ரல் 21, 2020
உலக வர்த்தக மையத்தின் விதிகளை இந்தியாவின் புதிய அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் மீறுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கைகளில் இந்தியா ஏற்படுத்திய திருத்தங்களால், உலக வர்த்தக மையத்தின் தடையில்லா வர்த்தகக் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டது என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.
அண்மையில், அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை இந்தியா மாற்றியமைத்தது. இதன்படி, இந்திய நாட்டில் செயல்படும் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்வதற்கு அரசிடம் முன் அனுமதியைப் பெற வேண்டும் என நில எல்லையை பகிா்ந்து கொண்டுள்ள நாடுகளுக்கு இந்தியா புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இந்தியாவின் இந்த புதிய விதிமுறை, உலக வா்த்தக அமைப்பின் தடையற்ற வா்த்தக கோட்டுபாடுகளை மீறுவதாக உள்ளது" என்று சீன தூதரக செய்தித் தொடா்பாளா் ஜி ரோங்க் தெரிவித்துள்ளார்.
மேலும், நியாயமான முறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சுமுகமான வர்த்தக உறவு இருக்கும் இந்த வேளையில், இந்தியா இப்படி விதிமுறைகளை விதித்திருப்பதை இந்தியா மாற்றியமைக்கும் என்று சீனா நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக