>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 22 ஏப்ரல், 2020

    துன்பம் இல்லாத வாழ்க்கை... எப்போது கிடைக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
    நீதிபதி : உன்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணம் ஆகிவிட்டதால்... உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
    குற்றவாளி : எத்தனை கிலோவை தூக்கணுமுன்னு சொல்லிட்டிங்கன்னா... நான் தூக்கிக்கிட்டு நடையை கட்டுறேன் எசமான்.
    நீதிபதி : 😳😳
    ----------------------------------------------------------------------
    கணவன் : 3 நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்...
    மனைவி : இதையே, தினமும் பீர் குடிக்கும்போது நினைக்கலாமே..????
    கணவன் : நாளைக்கும் பீன்ஸ் பொரியலே பண்ணுமா...
    மனைவி : 😬😬
    ----------------------------------------------------------------------
    நீதிபதி : பேங்க்ல பணத்தை கொள்ளையடிச்ச சரி... போகும்போது பேங்க் மேனேஜர் வழுக்கை மண்டையில ரெண்டு கொட்டு கொட்டிட்டு போயிருக்கியே ஏன்?.
    திருடன் : பணம் மட்டுமே ஒரு மனுஷனுக்கு சந்தோஷத்தை கொடுக்காது எசமான்.
    நீதிபதி : 😠😠
    ----------------------------------------------------------------------
    துன்பம் இல்லா வாழ்க்கை...!!

    பேராசைகள் இல்லாத வாழ்க்கையை எப்போது நீ தேடி செல்கிறாயோ...
    அப்போது துன்பம் இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்...🤷🤷‍♂️
    ---------------------------------------------------------------------
    பேனாவாக இருங்கள்...!!

    பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாய் இருக்காதீர்கள்...

    நீங்கள் நினைத்ததை எழுதும் பேனாவாக இருங்கள்...!!🖊

    ----------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    தோற்று போய்விட்டோமே என உடைந்து போய் நிற்பதை விட,
    தோல்விதானே என்று உறுதியுடன் திறம்பட
    தளராத தன்னம்பிக்கையோடு எழுந்து ஓரடி வையுங்கள்...
    அடுத்த அடி தானாக வைத்து வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கும்...
    மனமும்... உடலும்
    ----------------------------------------------------------------------
     குறளும்... பொருளும்...!!
    நயனிலன் என்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை.

    விளக்கம் :

    ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக