Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஏப்ரல், 2020

கொரோனாவால் அதிகரிக்கும் ஜிஎஸ்டி!


கொரோனாவால் அதிகரிக்கும் ஜிஎஸ்டி
கொரோனா வைரஸ் (கோவிட்-19) கொள்ளை நோயை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை தவிர இதர தொழில்துறைகள் முழுவதுமாக முடங்கியுள்ளது.


மேலும், மார்ச் 31ஆம் தேதி வரையில், விபிஎன் (VPN) மூலமாக அலுவலகப் பணிகளை மேற்கொள்ள 1,748 வரித் துறை அதிகாரிகளுக்கு வழிவகை செய்துகொடுத்துள்ளதாகவும் ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில், “ஊரடங்கின் முதல் 10 நாட்களில் (மார்ச் 25 முதல் ஏப்ரல் 3 வரை) ஜிஎஸ்டி பதிவுகள் தொடர்பாக 20,273 விவகாரங்கள் கையாளப்பட்டுள்ளன. இதில் 10,077 புதிய பதிவுகளும், 3,377 திருத்தங்களும், 1,966 பதிவு ரத்துகளும் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ரீஃபண்ட் தொடர்பாக 7,876 விவகாரங்கள் கையாளப்பட்டுள்ளன. நிலுவையில் இருக்கும் விவகாரங்களை உடனடியாக கையாளுவதற்கு வரித் துறை அதிகாரிகளுக்கு விபிஎன் உதவுவதாக ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது. மேலும், ஆட்டோமேட்டிக் முறையில் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதால் விவகாரங்கள் உரிய நேரத்தில் கையாளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக