Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 15 ஏப்ரல், 2020

மருத்துவர் வேடம் போட்ட மருந்துக் கடை உரிமையாளர் கைது!

பெரியகுளத்தில் அரசு அனுமதியின்றி தனியார் மருந்துக் கடையில் மருத்துவர் எனக்கூறி பொதுமக்களுக்கு ஊசி மருந்து போடப்பட்டதால் மருந்துக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
மருத்துவர் வேடம் போட்ட மருந்துக் கடை உரிமையாளர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை மதுரை சாலையில் இயங்கி வரும் ரிலிஃப் மருந்துக் கடையை நடத்தி வருபவர் முகமது யூனிஸ் சேட். இவருக்கு வயது 45. இவருடைய மருந்துக் கடைக்கு மாத்திரை வாங்க வரும் நபர்களிடம் தானும் மருத்துவம் படித்த மருத்துவர்தான் என பொய்யான தகவலைக் கூறி மருத்துவர் போல் நாடகமாடி பொது மக்களை நம்பச் செய்துள்ளார். மேலும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு தகுந்தார் போல் தனக்குத் தெரிந்த பாணியில் ஊசி மருந்து செலுத்தி கட்டணம் வசூலித்து வந்துள்ளார்.


இவ்விவகாரம் தொடர்பாக இருவரிடமும் காவல்துறையினர் துருவித்துருவி விசாரணை செய்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஒன்றிய பகுதிகளிலும் 30க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான கடைகளில் பொதுமக்களுக்கு மாத்திரை வழங்குவதை விட்டுவிட்டு ஊசி மருந்து செலுத்தி பணம் சம்பாதித்து வருகின்றன.

இவரைப் போன்ற நபர்களை கண்டறிந்து, பொது மக்களின் உயிர் விலை மதிப்பற்றது என்பதனை உணர்ந்து மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் லட்சுமணன் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருந்தகங்களில் ஊசி மருந்து செலுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும், அவ்வாறு ஊசி மருந்து செலுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!