Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கொரோனா இல்லாத மாநிலமாக மாறி வரும் கேரளா: எப்படி சாத்தியம்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் இருந்த கேரளா, தற்போது முதல் 10 இடங்களில் இல்லை என்பது ஒரு ஆச்சரியமான முன்னேற்றமாக காணப்படுகிறது 
 
கேரள அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாகவும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு கேரள மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து கொடுத்த ஒத்துழைப்பு காரணமாகவும் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது 
 
உலக சுகாதார மையம் கொடுத்த அறிவுரையின்படி அதிரடி நடவடிக்கை எடுத்தது, அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தது ஆகியவையே கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக மீள்வதற்கு காரணம் என்று கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவை பின்பற்றி தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் கொரோனாவில் இருந்து விடுபட அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் அரசுக்கு முழு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக