Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

’’ஹூண்டாய் நிறுவனம்’’ ரூ.5 கோடி நிதி உதவி !

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவுக்கு 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மொத்தம் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் . அரசு மக்களைக் காக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள், தொழிலபதிபர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் முதல்வரிம் பொது நிவாரண நிதிக்கு உதவி செய்துவருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பிரபல  ஹூண்டாய் நிறுவனம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக