>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 30 ஏப்ரல், 2020

    அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து... இதுதான்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    கொஞ்சம் சிரிங்க பாஸ் !!

    பாபு : என்னங்க வாசல்ல உட்கார்ந்து பைனாகுலர் வெச்சு பாத்துக்கிட்டு இருக்கீங்க?
    ராமு : தூரத்துச் சொந்தக்காரங்க வர்றாங்களான்னு பாக்குறேன்.
    பாபு : 😩😩
    --------------------------------------------------------------------
    தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா, வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன் தெரியுமா..
    பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா... எல்லா கடையிலையும் நிறைய CCTV கேமரா வெச்சிருக்காங்க.
    தாத்தா : 😝😝
    --------------------------------------------------------------------
    மருத்துவர் : நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்துச்சா.....?
    நோயாளி : பாட்டிலை காலி பண்ணிக்கூட பாத்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்ல...
    மருத்துவர் : 😱😱
    --------------------------------------------------------------------
    வீட்டுக்காரர் : (திருடனைப் பாத்து) ஐய்யைய்யோ, ஐய்யைய்யோ... என் பணம், நகையெல்லாம் திருடுறானே?
    திருடன் : யோவ்! சத்தம் போட்டனா போலீஸ்ல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லிடுவேன்!
    வீட்டுக்காரர் : 😳😳
    --------------------------------------------------------------------
    ஏன்? ஏன்?....

    1. போர்வீரன் சாவதேன்? சாம்பார் மணப்பதேன்?

    2. குப்பை தேங்குவதேன்? குழந்தை அழுவதேன்?

    3. வானில் சத்தம் கேட்பதேன்? அரிசி மாவாய் ஆவதேன்?

    விடைகள் :

    1. பெருங்காயத்தால்.

    2. எடுப்பாரற்று.

    3. இடிப்பதால்.
    --------------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    🌟 வாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.
    ஒருமுறை சுவைக்க பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

    🌟 நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம்.
    ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

    🌟 அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
    அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

    🌟 தவறு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக